Tuesday, December 24, 2013

பாகற்காய் மருத்துவ குணம்

பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது உடலில் உள்ள ஒருவிதமான வளர்சிதை மாற்றக் கோளாறே ஆகும். எனவும் நீரிழிவை முழுமையாக குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அதிலும் பாகற்காயை நம்பி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை நிறுத்துவதும் கூடாது.

மருந்து மாத்திரைகளுடன் பாகற்காயையும் வேண்டுமானால்

குழந்தைகளை தாக்கும் பல் நோய்கள்

மனிதன் முக அழகில் மட்டும் அல்ல உடல் நலத்திலும் முக்கிய பங்கு வகிப்பது பற்கள். சிலருக்கு பற்கள் முன்பக்கமாக நீண்டும், வரிசையாக இல்லாமலும் இருக்கும். இதன் காரணமாக அவர்களது முக அழகு சிதைந்து விடும். இதனால் ஏராளமானோர் தன்னம்பிக்கை இழந்து வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள்.

பற்களின் அழகு சிதைந்து போவதற்கு குழந்தை பருவத்தில் அதை முறையாக கவனித்து பராமரிக்காதது தான் காரணம். குழந்தை பருவத்தில் இருந்தே பல் குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் குழந்தைகளை காண்பித்தால், பற்களின் ஆரோக்கியம், அழகு

Tuesday, December 17, 2013

குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள்

குளிர்காலம் வந்துவிட்டது, அக்டோபர் மாதத்தின் வெயில் தீபாவளிக்குப் பின்னர் வேகமாக குறைந்து, உதறலெடுக்கும் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந் நாட்களில், உங்கள் சருமம் வறண்டு போகும், முடிகள் உறைந்து விடும் மற்றும் உடலின் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும்.

இந்த மாற்றங்களை எதிர் கொள்ள சற்றே அதிகமான கவனமும், கவனிப்பும் வேண்டும். ஏனெனில், குளிர் காற்று உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த குளிர்காலம் அமைந்து விடுகிறது.

கடும் வெயிலையும் தாங்கி கொள்ளும் இந்த உடல் குளிர்காலத்தில் பாடாய்படுத்தி விடுகிறது. இனி வரும் இரண்டு மாத குளிரை சமாளித்து நோயற்ற வாழ்வை பெற நாம் முயற்சிக்க வேண்டும்.

Tuesday, December 10, 2013

சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் சிறந்த மருந்து

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் பற்றிய விபரங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி. எம்.ஆர்.) சேகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 6.2 கோடிப் பேர் (62 மில்லியன்) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகரங்களில் வாழ்வோரில் 11 சதவிகிதம் பேருக்கும், கிராமங்களில் வாழ்வோரில் 3 சதவிகிதம் பேருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. மொத்த செலவில் 2.1 சதவிகிதம் இந்நோய்க்கான மருத்துவத்துக்கு செலவிடப்படுகிறது.

காஸ்ட்லி டிஸீஸ் அதாவது, பணக்கார நோய் என்று குறிப்பிடுகின்றனர். இதற்கான மருந்து, மாத்திரைகளின் விலை, மிகவும் அதிகம். 2025-ம்

ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள்

ஆரஞ்சுபழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன.

நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும். ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

100 கிராம் எடை கொண்ட பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீதாப்பழம் மருத்துவ பலன்கள்

கூழான சதைப் பகுதியும், நறுமணத்துடன் கூடிய இனிப்பு சுவையும் கொண்டது சீதாப்பழம். வெப்ப மண்டல பகுதிகளின் ருசியான கனிகளில் இதுவும் ஒன்று. சீதாப்பழத்தில் அடங்கியுள்ள அத்தியாவசிய சத்துக்களை பார்க்கலாம்..

* தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் பள்ளத்தாக்குப் பகுதிகளான பெரு, ஈக்வடாரை தாயகமாகக் கொண்டவை சீதாப்பழம். பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறங்களில் இவ்வகை கனிகள் இருக்கும்.

இதன் தோற்பரப்பு கடினமான வரிகளைக் கொண்டதுபோல் காணப்படும் என்றாலும் லேசான அழுத்தம் கொடுத்தாலே கனியின் சதைப் பகுதியை சுவைத்து உண்ணும் அளவுக்கு நெகிழ்ந்து விடும்.

சீதாப்பழத்தின் தாவர குடும்பம் அன்னோ நேசியே. இதன் அறிவியல்

குடைமிளகாய் மருத்துவ பலன்கள்

கலர் கலராய் தெரியும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது! கொலாஸ்ட்ரால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்தது.

சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு

Wednesday, December 4, 2013

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள நன்மைகள்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறுவது உண்டு. ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.ஆனால் இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்ட்ராபெரி பழத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது.

இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

சகல நோய்களுக்கும் நிவாரணி எலுமிச்சை

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக்கூட எளி தில் தீர்த்துவிட முடியும். பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்னவென்றால் உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான்.

ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மை கள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு

பச்சை நிற பழங்களில் உள்ள சத்துக்கள்

பச்சைத் திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ் போன்றவை பச்சை நிறம் பழங்கள். குளோரோஃபில், நார்ச்சத்து, லுடீன், கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் இதில் உள்ளன.

மேலும், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் ரசாயனம் இதில் உள்ளன. இவை புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைப்பது, ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவது போன்ற பணிகளைச் செய்கின்றன.

காய்கறி- பழங்கள் பச்சை நிறத்தை குளோரோஃபில்-இல் இருந்து

கோவைக்காய் மருத்துவ குணங்கள்

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. இவற்றின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.

தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

Wednesday, November 27, 2013

கத்தரிக்காய் மருத்துவ குணங்க‌ள்

கத்தரிக்காயில் அதிளவு சத்துக்கள் உள்ளன.பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்..

மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.
ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும்

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உணவு முறைகள்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. அத்தகைய உணவுகள் என்னென்னவென்று பார்க்கலாம்.

• பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.

Sunday, November 24, 2013

நெஞ்சு எரிச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்!

`ஜீரணம்' அதாவது `செரித்தல்' முதலில் வாயில் தான் ஆரம்பிக்கிறது. சாப்பாட்டின் மணம், நம் மூக்கில் பட்டவுடனேயே, வாயைச் சுற்றியுள்ள உமிழ்நீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு, உமிழ் நீரை சுரக்கச் செய்கிறது. இதைத்தான் சாப்பாட்டைப் பார்த்தவுடனேயே, வாயில் எச்சில் ஊறுகிறது என்று சொல்வதுண்டு.

ஒருமுறை என் நடிக நண்பர் ஒருவர் என்னிடம் , ``ரோட்டில் காரில் போகும்போது, ஹோட்டலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் போர்டிலுள்ள, சாப்பாட்டு அயிட்டங்களின் பெயர்களைப் படித்தாலே, எனக்கு நாக்கில், எச்சில் இஷ்டத்துக்கு ஊற ஆரம்பித்து விடுகிறது. அதற்கு மேல் என்னால் வண்டியை ஓட்ட முடியலை'' என்றார். அவர் சொன்னது உண்மை தான்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மூலிகைகள்

உலகளவில் சர்க்கரை நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஐந்தாவது இந்தியக் குடிமகனும் ஒரு சர்க்கரை நோயாளி என்னும் அளவிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியா உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. `

`நீரழிவு'', ``மதுமோகம்'' என்ற பெயர்களால் இந்நோய் நெடுங்காலமாய் நம் மருத்துவத்தில் அறியப்பட்டுள்ளது. ஒரு நோயாளியின் சிறுநீரைத் தரையில் விட்டு அவ்விடத்தில் எறும்புகள் ஈர்க்கப்படுவதனை வைத்து இந்நோயை நம் முன்னோர்கள் கணித்தனர்.

2012-ம் ஆண்டு உலக சர்க்கரை நோயாளிகள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 6.3 கோடி மக்கள் சர்க்கரை

ஆயுர்வேதத்தில் தைராய்டு நோய்க்கு நிரந்தர தீர்வு

தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. தைராய்டு நோய் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

முறையாக, தொடர்ச்சியாக ஆங்கில மருந்தோ, சித்த ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்தோ முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். மந்தாரை- தைராய்டு நோய்க்கு அற்புத தீர்வு.

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

கல்யாண முருங்கை (முள் முருங்கை):-

அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். சர்க்கரை நோய், சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.

வாழைத்தண்டு:- சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.

சுரை‌க்கா‌யி‌ன் மருத்துவ குணங்க‌ள்

சுரை‌க்கா‌ய் ‌நீ‌ர்‌ச்ச‌த்து ‌மிகு‌ந்தது. இ‌தி‌ல் வை‌ட்ட‌மி‌ன் ‌பி2, இரு‌ம்பு‌ச் ச‌த்து, சு‌ண்ணா‌ம்பு‌ச் ச‌த்து, புரத‌ம் ஆ‌கியவை உ‌ள்ளன. சுரை‌க்காயை சமை‌த்து உண்டு வந்தால் உட‌ல் ‌வீ‌க்‌க‌ம் குறையு‌ம். ‌சிறு‌நீ‌ர் ‌அ‌திகமாக இற‌ங்கு‌ம்.

இதை க‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌ண்க‌ள் பாத ‌வீ‌க்க‌ம் குறைய சமை‌த்து உ‌ண்ணலா‌ம். சுரை‌க்கா‌ய், துள‌சி, ஆடாதோடை ஆ‌கியவ‌ற்றை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி, அவ‌ற்றுட‌ன் சு‌க்கு, ‌தி‌ப்‌பி‌லி, ப‌ற்படாக‌ம், கோரை‌க் ‌கிழ‌ங்கு சே‌ர்‌த்து கஷாய‌மி‌ட்டு குடி‌த்து வர கு‌ளி‌ர் கா‌ய்‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

சுரை‌க்கொடியை பூ‌ண்டுட‌ன் சே‌ர்‌த்து சமை‌த்து உ‌ண்டு வ‌ந்தாலோ அ‌ல்லது கொடியை ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி கஷாயமா‌க்‌கி‌க் குடி‌த்து வ‌ந்தாலோ, உட‌லி‌ல் த‌ங்‌கிய ‌நீர் வெ‌ளியா‌‌கி, உட‌ல் ‌‌வீ‌க்க‌த்தை குறை‌க்கு‌ம். சுரை‌க்கொடி இலையை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌‌ச்‌சி ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து குடி‌த்து வர காமாலை குணமாகு‌ம்.

Thursday, November 14, 2013

உடம்பை குறைக்கணுமா?

அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது. 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?' என்று திணறித் தவித்துப் போகிறார்கள். அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை...

* அன்றாடம் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடல் பருமனை அதிரடியாகக் குறைக்கிறேன் பேர்வழி என்று கொலைப்பட்டினி கிடைக்கக்கூடாது.

* நொறுக்குத் தீனிகளைத் தள்ளி வைக்க வேண்டும். 'இன்று மட்டும் சாப்பிடுகிறேன்' என்று நினைத்தால், என்றுமே அவற்றுக்கு விடைகொடுக்க முடியாது.

ரத்த அழுத்தத்தில் இருந்து காக்கும் கேரட், பப்பாளி!

உலக மக்களை அச்சுறுத்தும் பிரச்சினையாக தற்போது உயர் ரத்த அழுத்தம் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், பசலைக்கீரை, பரங்கிக்காய், கேரட் போன்ற காய்கறிகள் மூலமும், வாழை, பப்பாளி போன்ற பழங்கள் மூலமும் மக்கள் தங்களை ரத்த அழுத்தத்தில் இருந்து காத்துக்கொள்ள முடியும் என்கிறது, உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ).

இந்நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி, உலகெங்கும் ஆண்டுதோறும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தத்தால் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க, வயது வந்தோர் தினமும் 5 கிராமுக்குக் குறைவாக உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது தினசரி 3 கிராம் பொட்டாசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்

மஞ்சள் உலகின் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல் வாதம்) சிகிச்சையில் பயன்ப டுத்தப்படுகிறது.

ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை. மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கலாம்.

அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது,

குழந்தைகளின் தூக்கம் வித்தியாசமானது

* குழந்தைகளின் தூக்கம் வித்தியாசமானது. குழந்தைகளின் தூக்கத்தை கட்டுப்படுத்துவது மூளையின் ஹைப்போதலாமஸ் என்ற பகுதி. இது தூக்கத்தை மட்டுமின்றி உணவு, சுபாவம், இதயம், சருமம், கிட்னி, ஹார்மோன் செயல்பாடு போன்றவைகளையும் ஆளுமை செய்கிறது. அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் மேற்கண்ட உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கும்.

* பெரியவர்கள் ஒரு இரவு தூங்காவிட்டால், மறுநாள் காலையில் தூங்கி அதை ஈடுசெய்துகொள்வார்கள். குழந்தைகளால் அது முடியாது என்பதால், தூக்கமின்மை குழந்தைகளை வெகுவாக பாதிக்கும்.

* இரண்டு மாதம் வரை குழந்தைகள் 10 முதல் 19 மணிநேரம் தூங்கும். மூன்றில் இருந்து 12 மாதம் வரை 13 மணி நேரம் வரை தூங்கும். ஒரு வயது முதல் மூன்று வயது வரையும் கிட்டத்தட்ட அதே காலஅளவில்

Thursday, October 31, 2013

காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்

தினமும் மூன்று கப் காபி அருந்துவதன் மூலம் கல்லீரல் புற்றுநோயை 50 சதவிகிதம் குறைக்கமுடியும் என்று ஒரு புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஈரல் செல்லியல் புற்றுநோய் ஆபத்தை 40 சதவிகிதம் வரை குறைக்கக்கூடும் என்றும் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ அமைப்பின் சார்பில் வெளிவரும் அமெரிக்க மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் தோன்றும் பொதுவான புற்றுநோய்களில் கல்லீரல் புற்றுநோய் ஆறாவது இடத்தைப் பிடிக்கின்றது. மற்றும் இறப்பிற்கான புற்றுநோய் காரணங்களில் இது மூன்றாவது இடத்தைப் பிடிக்கின்றது. இதிலும் ஈரல் செல்லியல் புற்றுநோய் என்பது உலகம் முழுவதிலும் காணப்படும் புற்றுநோயில் 90 சதவிகிதம் காணப்படுவதாகும்.

உடல் வலியை ஏற்படுத்தும் பல்வேறு காரணங்கள்

இன்றைய காலச்சூழ் நிலையில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் வலி. பொதுவாக இந்த உடல் வலியானது ஒருசில கடுமையான எடை கொண்ட பொருட்களை நீண்ட நேரம் தூக்குவதாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொள்வதாலோ சந்திக்க நேரிடும்.

ஆனால், சில நேரங்களில் இந்த உடல் வலி சில நோய்களுக்கான அறிகுறியாகவும் உள்ளது. உடல் வலி எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. அனைத்து வயதினரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று. இத்தகைய உடல் வலியில் பல வகைகள் உள்ளன.

Thursday, October 24, 2013

குழந்தைகளின் மென்மையான சருமத்தை பாதிக்கும் டயப்பர்

குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்' அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம்.

சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி?

* டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள்.

* டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தை உணவு சாப்பிட மறுத்தால்...

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கஷ்டமான காரியம்தான். கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடுவார்கள். உங்கள் குழந்தையும் இப்படிச் செய்தால், உடனே சோர்ந்து விடாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து அதே முறையை மீண்டும் முயற்சிக்கலாம்.
 
சரி, வேறு ஏன் குழந்தைகள் உணவை வாயில் இருந்து வெளியே தள்ள முயற்சிக்கின்றன? குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

உங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா?

சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் `ப்ரீ'யாக விட்டுவிடுவார்கள். அவ்வாறு செய்பவர்கள், ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று யோசித்திருக்க மாட்டார்கள். உங்கள் குழந்தையும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா? அதற்கு காரணம், இதுதான்...

பொதுவாக பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு தரும் பசும்பால் அல்லது ஆவின் பாலில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். டின் பவுடர் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Monday, October 21, 2013

மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம்

வெங்காயம் என்றாலே அனைவரும் பயப்படுவது அதிசயம் இல்லாத ஒன்றுதான். வெங்காயம் வெட்டினாலே கண்ணிலிருந்து கண்ணீர் வரும் என்று தான் நாம் அனைவரும் அறிகின்றோம். ஆனால் அவற்றில் இருக்கும் மருத்துவ குணத்தை யாரும் அறிவதில்லை.

இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் வெங்காயம். இவை பூச்சிக்கடி, ஆஸ் துமா, சளி, கபம் போன்ற நோய்களிலிருந்து நம்மை காக்கும். சங்க காலத்திலிருந்தே வெங்காயத்தின் மருத்துவ குணத்தை மருத்துவர்கள் அறிந்துள்ளனர்.

பசியுணர்வு இல்லாதவர்கள் வெங்காயத்தை உண்பதால் பசி உணர்வு தூண் டப்பட்டு, உடலின் அழற்சி நீக்கப்பட்டு, உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றது. வெங்காயத்தில் கால்சியம்,

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்

பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது.

உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது.

தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் - தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில்

ஆயுளை குறைக்கும் மாட்டு இறைச்சி

மாட்டுக்கறி உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன் இளம் வயதிலேயே மரணத்தை தரும் எனக் கூறப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தள்ளுவண்டிகளில் பீப் பக்கோடா விற்பனையும் சூடு பிடிக்கிறது. ரெட்மீட் எனப்படும் மாட்டுக்கறியை சாப்பிட்டால் இளம் வயதில் மரணமடைய நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலை நாடுகளில் மாட்டுக்கறி சிவப்புக் கறியாக கூறப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. இந்த சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.

இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி

Sunday, October 13, 2013

அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய ஈத் முபாரக்

Saturday, October 12, 2013

திராட்சையில் உள்ள மருத்துவ குணங்கள்



ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.

உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும் சக்தி

காளான் மருத்துவ பயன்கள்

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி

கோதுமை மருத்துவ குணங்கள்

கோதுமையின் மகத்தான பயன்களை பார்க்கலாம்....

* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.

* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.

* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

Tuesday, October 8, 2013

வண்ண வண்ண காய்கறிகள்

எல்லா காய்கறியும் நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை தருது. அதுல முக்கியமாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள காய்கறிகள்ல என்ன சத்துக்கள் இருக்குன்னு பார்ப்போமா... முதல்ல வெள்ளை நிறக் காய்கறிகளைப் பற்றி பார்ப்போம். வெங்காயம், பூண்டு, முள்ளங்கி போன்ற காய்கறிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இதை சாப்பிடும்போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் கிடைக்குது. அப்புறம், கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகுது. குறிப்பாக, வெங்காயம், பூண்டு போன்றவற்றில் சல்பைடுகள் நிறைய இருக்குது. மேலும், ஆல்லிசின் என்ற வேதிப்பொருளும் இதில இருக்குது. இவை உடலில் கட்டிகள் ஏற்படாமல் தடுக்குது.

பாகற்காய் மருத்துவ குணங்கள்

கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்...

* பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.

* குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.

* பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது.

Thursday, October 3, 2013

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ் கூறிய எளிய வலியில்லா வழி முறைகளை பின்பற்றுங்கள். காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர்.

Saturday, September 28, 2013

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நாவல் பழம்

வேறு பெயர்கள்: நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் . நாவல் பழம் எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம். நாவல் மரத்தின் பழம், இலை, மரப் பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கல்லீரல் கோளா றுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் இடம் பெற்ற இந்தப் பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.

Wednesday, September 25, 2013

நீண்ட ஆரோக்கியம் பெற சித்தா காட்டும் வழிகள்

இறைவன் பூமியை படைத்து அதில் இயற்கை வளங்களை உருவாக்கி அவற்றை அனுபவிக்க மனிதனையும் படைத்தான். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அனைத்தையும் படைத்துள்ளான். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பது மனிதன் மட்டுமே. அவனது பேராசை இதற்கு காரணமாக உள்ளது எனலாம்.

இதனால் பல்வேறு நோய்கள் உண்டாகி, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மகிழ்ச்சியை தொலைத்து மன உளைச்சலோடு வாழ்ந்து வருகிறான். தற்போது நம் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இருப்பினும் நோயின்றி வாழ முடியாத நிலையே நிலவுகிறது.

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு

குங்குமப் பூவில் மருத்துவகுணம் உள்ளது

கருவில் இருக்கும் குழந்தை 'கலராக' பிறக்கும் என்று பலரும் குங்குமப்பூவை சாப்பிடுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மிக அதிக விலைகொண்ட நறுமணப் பொருட்களில் ஒன்று குங்குமப்பூ. அதன் மருத்துவகுணம் அதற்கு விலை உயர்ந்த மதிப்பைக் கொடுத்துள்ளது. அதிலுள்ள சத்துக்களை பார்ப்போம்...

குங்குமப்பூ என்பது நிஜமான மலரல்ல. 'குரோகஸ் சட்டைவஸ்' என்ற அறிவியல் பெயர் கொண்ட தாவர மலரின், சூல்முடிகளே 'குங்குமப்பூ' ஆகும். இதன் வழக்கு மொழிப் பெயர் 'சப்ரான்'. தெற்கு ஐரோப்பாவை தாயக மாகக் கொண்டது குங்குமப்பூ. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரில் மிகுதியாக விளைகிறது.

Friday, September 20, 2013

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

உடல் எடையை குறைக்கும் இந்திய உணவு பொருட்கள்

உலகில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனானது ஏற்படுவதற்கு அதிகப்படியான கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால், கொழுப்புக்களானது உடலில் ஆங்காங்கே தங்கி, உடல் எடையை அதிகரித்து விடுகிறது.

மேலும் தற்போதைய வாழ்க்கை முறையில் உண்ணும் உணவுகள் அனைத்திலுமே கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறது. கடைகளில் விற்கப்படும் எந்த ஒரு உணவையும் ஆரோக்கியம் என்று கருதி சாப்பிட முடியாது. அதுமட்டு மல்லாமல், கடைகளில் கொழுப்பில்லாத உணவுகள் என்று குறிப்பிட்டு விற்கப்படும் உணவுகளில் தான் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது.

எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர், உண வுகளில் கவனமாக இருப்ப வராக இருந்தால், இந்திய உணவுப்பொருட்கள் என்று

ஆரோக்கியமான வழியில் சமைத்து சாப்பிடுவது எப்படி?

இன்றைய சூழலில் நம் ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது பெரிய விஷயமாகிவிட்டது. வேகமாக செல்லும் மக்கள் இப்போது நம்பியிருப்பது ஃபாஸ்ட் ஃபுட்டை தான். பின் எப்படி ஆரோக்கியம் நிலைக்கும்ப சரி, ஆரோக்கியத்தை காக்க வேண்டுமா? இந்த வருட இறுதிக்குள் உடல் எடை குறைய வேண்டுமா?

அல்லது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா அதற்காக ஒன்றும் கடுமை வாய்ந்த உணவுப் பழக்கத்தை கடை பிடித்து ஐஸ்க்ரீம், கேக் போன்ற டெசர்ட்களை தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

அதற்கு பதிலாக அன்றாடம் உண்ணும் உணவுகளில் சிறு மாற்றங்களும், சமைக்கும் முறையில் சிறிய மாற்றங்களையும் கொண்டு வந்தால் போதுமானது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, கலோரிகளை குறைத்து

Wednesday, September 18, 2013

ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள்

உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும்.

இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.

அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை ஏற்படும். எனவே தான், கடைகளில்

Friday, September 13, 2013

இளமை தோற்றத்தை தக்கவைக்கும் 14 உணவுகள்

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏதோ உண்டோம் ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பது வாழ்க்கை இல்லை. உண்ணும் உணவிலிருந்து. உடுத்தும் உடையிலிருந்து கவனமாக இருப்பது அவசியம். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதால், முதுமைத் தோற்றத்தைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.

உண்ணும் உணவை தேர்ந்தெடுப்பது என்பது தேவையான ஒன்று. அன்றாடம் நாம் உழைத்து சேமிப்பது அனைத்தும் வயிற்றுக்கு தான். எனவே உண்ணும் உணவில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து கொள் வது மிகவும் அவசியம்.

இதயத்தை வலுவாக்கும் கம்பு

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம். நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர்.

காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர்.

நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது. இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும்.

கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள்

கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு

உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை

* எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

* தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்

* பட்டினிக் கிடத்தல் கூடாது

* அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது

* உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்

* இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

* எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு போன்றவை வராமல் காக்கும் சப்போட்டா பழம்

வெப்பமண்டல கனிகளில் பரவலாக சாப்பிடப்படும் பழவகை சப்போட்டா. தித்திப்பான சுவை கொண்ட இது அதிக ஆற்றல் தரக்கூடியது. பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை அடக்கியது. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது சப்போட்டா.

மெக்சிகோ, பெலிசி போன்ற பகுதி மழைக்காடுகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. சப்போட்டா அதிக ஆற்றல் தரக்கூடியது.

100 கிராம் பழத்தில் 83 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. நிறைந்த நார்ச்சத்து கொண்டது சப்போட்டா. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை எளிதில் ஜீரணம்ஆகக்கூடியது.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...