Tuesday, October 14, 2014

உடல் ஆரோக்கியத்திற்கு அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம்

வளர் இளம்பருவத்தினர் மட்டுமல்லாமல், எல்லா வயதினருக்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். மிதமான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்பைக் குறைக்கும்;

மன அழுத்தத்தைக் குறைக்கும்; தசைகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து உறுதிப்படுத்தும். ஒரு காலத்தில் 40-50 வயதில் வந்த மாரடைப்பு, சர்க்கரை நோய் இன்று 20-30 வயதிலேயே வந்துவிடுகிறது. இளம்பருவத்தில் தங்களுடைய உடலைப் பராமரிக்கத் தவறியதன் விளைவுதான் இது.

13 வயதில் இருந்து 19 வயதுக்குட்பட்ட பெரும்பாலானவர்கள்

தண்ணீர் குடிங்க நோய் வருவதை தவிர்க்க

சிறுவயதில் இருந்தே தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் உடல் வளர்ச்சியும், சுறுசுறுப்பான வாழ்க்கையும் அவர்களுக்கு அமையும். பெரியவர்கள் தினமும் 8 தம்ளர் தண்ணீர் குடித்தால் பலநோய்கள் வராமல் தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

சிறுநீரகம் நன்றாக வேலை செய்யவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மூட்டு வலி, முதுகு வலி பாதிப்பை தவிர்க்கவும், தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல தண்ணீர் அருந்துவது உடல் வலியினை நன்கு குறைக்கும்.

கழிவுப் பொருட்கள் தண்ணீர் உதவியால் `லிம்பாடிக் குழாய்களின்' மூலம் குடல், சிறுநீரகம் வழியாக வெளியேறுகின்றது. நன்கு தண்ணீர்

பிஸ்தா இதயதை காக்கும்

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.

பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.

பகலில் தூங்குவது நல்லதா?

 பகல் உறக்கம் என்பது பொதுவாக நல்லதல்ல என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது. எனினும், தற்போதைய காலச் சூழலில், பலரும் இரவில் பணிக்குச் சென்றுவிட்டு பகலில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இது போன்றவர்களைத் தவிர்த்து, அதிகம் பேசுபவர், பயணம் செய்பவர்கள், அதிக தூரம் நடைப் பயணம் செய்பவர்கள், மதுபானம் அருந்துபவர்கள், அதிக உடலுறவில் ஈடுபடுபவர்கள், தலையில் பொருட்களைச் சுமந்து செல்பவர்கள், அதிக கோபம், வருத்தம்,

பயம் போன்றவற்றால் உடல் தளர்ந்தவர்கள், ஆஸ்துமா, விக்கல், வயோதிகர், குழந்தைகள், பலவீனமுள்ளவர்கள், காச நோய், உடல் வலியால் வேதனைப்படுபவர், அஜீரணம், விபத்தில் அடிபட்டவர், எலும்புமுறிவு, பகல் தூக்கத்தை பழக்கமாக்கிக் கொண்டவர் ஆகியோரைத் தவிர்த்து மற்றவர்கள் பகலில் தூங்கக் கூடாது.

எந்த எண்ணெய் உடலுக்கு நல்லது

விலை அல்லது விளம்பரத்தில் கூறப்பட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து வாங்குகிறார்கள். ஆனால், உடலுக்கு எந்த விதமான எண்ணெய் ஒத்துப் போகும் என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெயாக தற்போது சூரிய காந்தி எண்ணெய் அதிகரித்து வருகிறது.

இந்த எண்ணெய்யில் அமிலம் அதிகம் உள்ளது. தீய கொலஸ்ட்ராலை மட்டுமன்றி, நல்ல கொலஸ்ட்ராலையும் குறைப்பதால், சூர்ய காந்தி எண்ணெய்யை தொடர்ந்து உபயோகிக்கப்பதால், நமது உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்காமலேயே போய்விடுகிறது. இதனால், உடல் பல்வேறு கோளாறுகளை சந்திக்கிறது.

சூரிய காந்தி எண்ணெயில் அதிகமாக இருக்கும் அமிலத்துடன்,

குடல் புண்களை ஆற்றும் வாழைப்பூ

வாழையின் மருத்துவப் பயன்கள்: ஒரு சாதாரண அளவுடைய வாழைப் பழத்தில் 95 கலோரி சத்தும் வைட்டமின் `சி' சத்தும் நிறைந்துள்ளது. இது உடலுக்கு உடனடியாகப் புத்துணர்வு தருவதோடு எளிதில் செரிமானமாகக் கூடியது. கொழுப்புச் சத்தோ உப்புச் சத்தோ இல்லாதது.

வாழைப்பூ உணவாகவும், மருந்தாகவும் பயன் தரக் கூடியது. வாழைப் பூவில் விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ் , புரோட்டீன் (புரதம்)கள் நிறைந்துள்ளது. பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும் (பிராங்க்கைடிஸ்) மலச்சிக்கலை (கான்டிபேஷன்) தணிக்கவும்,

குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாதவிலக்கு

எலுமிச்சை புற்றுநோயை தடுக்கும்

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் ஏராளம், அவற்றில் சில:-

* எலுமிச்சை விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் ஸ்கர்வி என்னும் நோயைப் போக்க வல்லது. (விட்டமின் `சி' குறைவால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு ரத்தம் கசிகிற நிலையாகும். மேலும் இது ரத்த சோகையை உண்டு பண்ணுவதாகும். கணுக்கால் மற்றும் காலிலுள்ள தசைகளில் சற்று சிவந்த வீக்கத்தையும் தருகிற நோய்).

* வயிற்றிலுள்ள வாயுவைப் போக்கி சீரண உறுப்புகளை பலப்படுத்தக் கூடியதாகும்.

* வயிற்றுக் கோளாறுகள் அத்தனையும் எலுமிச்சையால் போகும்.

* ஒவ்வாமையால் வரும் நோய்களைத் தடுக்க கூடியது.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...