முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இன்று அல்குர்ஆன்தங்களுடைய வேத நூல் எனவே
அது தங்களுக்குறியதேஎன்று சொந்தம் கொண்டாடுகின்றனர். அதனால் அதனை முஸ்லிம்
அல்லாதவர்கள் கேட்டால் அதனை அவர்களுக்கு கொடுக்க மறுத்து விடுகின்றனர்.
அவர்கள் அசுத்தமானவர்கள்; எனவே அவர்கள் அதைத் தொடக்கூடாது என்று சட்டம்
வகுத்துள்ளனர். எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆனைப் படித்து
விளங்கி அதிலுள்ள உயர்ந்தகருத்துகளை அறியும் வாய்ப்பு இல்லாதவர்களாக
இருக்கிறார்கள். முஸ்லிம்கள் குர்ஆனை தங்களுடைய நூல் என்று சொந்தம்
பாராட்டுவதால் அவர்களும் அதை நம்பி தங்களுக்கும் குர்ஆனுக்கும் எவ்வித
சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொள்கின்றனர்.