குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கஷ்டமான காரியம்தான்.
கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள்
மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே
தள்ளிவிடுவார்கள். உங்கள் குழந்தையும் இப்படிச் செய்தால், உடனே சோர்ந்து
விடாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து அதே முறையை
மீண்டும் முயற்சிக்கலாம்.
குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.
அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
No comments:
Post a Comment