Friday, October 23, 2015

கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மீன் நல்லதா?

கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மீன் நன்மை பயக்கும் என்பது உண்மைதான். அதில் ஒமேகா 3, 6 ஆகியன இருப்பதால் நல்லது. ஏனெனில் இவை இரத்தக் குழாய்களில் அழற்சியைக் குறைத்து,

கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது.

வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது 3 முதல் 5 அவுன்ஸ் அளவிற்கு குறையாத மீன் சாப்பிடுவது அவசியம் என அமெரிக்க இருதய

சங்கம் கூறியுள்ளது. இருதய நோய் உள்ளவர்கள் மேலும் அதிகமாக உண்ண வேண்டும்.

குழந்தைகள் தனியாகத் தூங்க சரியான வயது

‘என் மகளுக்கு 16 வயதாகிவிட்டது. மாடர்னாக உடை அணிகிறாள். பொது அறிவு விஷயங்களில் தேறியிருக்கிறாள். விஞ்ஞானம், இலக்கியம் எல்லாம் பேசுகிறாள். ஆனால் தனியாக அவளுக்கான படுக்கை அறையில் படுப்பதில்லை. குழந்தைபோல் எங்களுடனே இரவிலும் ஒட்டிக்கொள்கிறாள்’ என்று குறைபடும் தாய்மார்கள் ஏராளம்.

தாயின் வயிற்றில் இருந்து இந்த உலகுக்கு அறிமுகமாகும் குழந்தை, தாயின் அருகாமைக்குத்தான் ஏங்கும். தாய் தன் அருகில் இருப்பதை அங்கு இங்கு திரும்பிப் பார்க்க முடியாவிட்டாலும் வாசனை மூலமும், தொடுதல் மூலமும் தாயை உணர்ந்துகொள்கிறது. தாயின்

பள்ளிக் குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படுவது ஏன்?

பெரும்பாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று நிறைய குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்று நினைத்து அவர்கள் சாப்பி டாமல் சென்றாலும் கண்டு கொள்வதில்லை.

ஆனால் காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல்

தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிக்கலாமா?

எண்ணெய்களை கொண்டு வாய் கொப்பளித்தால் நுண்ணுயிரிகள் வெளியேறி வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும். இதுவரை நல்லெண்ணெய்யில் மட்டுமே வாய் கொப்பளித்து வந்தோம், ஆனால் தேங்காய் எண்ணெயிலும் வாய் கொப்பளிக்கலாம். தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனையை சரிசெய்யும். பற்களில் ஏதேனும் கறை இருந்தால் தேங்காய் எண்ணெயால் வாய்கொப்பளிப்பதன் மூலம் பற்கள் வெண்மையாகும். டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சருமம்

பொரிப்பதற்கு ஏற்ற எண்ணெய் எது?

சாதாரண வெப்ப நிலையில் நல்லது என்று சொல்லப்படும் ஆலிவ் ஆயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம் போன்றவை சூடாக்கும்போது ஆரோக்கியமற்றதாக மாறிவிடுகிறது. எனவே அவை பொரிப்பதற்கு ஏற்றவை அல்ல.

ஒரு முறை பொரிக்க உபயோகித்த எண்ணெயில் மீண்டும் பொரிப்பதால் தோன்றும் நச்சுப்பொருட்கள் இருதயக் குழாய்களில் கொழுப்பு படிவதை அதிகமாக்குகிறது. எனவே ஒரு முறை சூடாக்கிய அத்தகைய

பச்சையாக சாப்பிட வேண்டிய சத்து நிறைந்த உணவுகள்

உணவுப் பொருட்களை பச்சையாக, அதாவது வேக வைக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும்.

• ப்ரோக்கோலி பச்சையாக சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள மைரோசைனேஸ் என்னும் நொதி, கல்லீரலில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை வெளியேற்றிவிடும். மேலும் ப்ரோக்கோலியை வேக வைத்து சாப்பிட்டால், அந்த நொதிகள் செயலிழக்கப்படும். எனவே ப்ரோக்கோலியை அவ்வப்போது பச்சையாக சாப்பிடுங்கள்.

• பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள

தலைவலியைத் தூண்டும் உணவுகள்

ஒருவருக்கு உடலில் ஏற்படும் வலிகளிலேயே மிகவும் தொல்லை தரக்கூடிய வலி தான் தலைவலி.

ஒருசில உணவுகளை உட்கொண்டாலும், தலைவலியானது அதிகரிக்கும். மேலும் அந்த உணவுகள் அனைத்தும் அனைவருக்கும்

தலைவலியை தூண்டும் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் அப்பொருட்கள் தலைவலியை
உண்டாக்கும்.

சாக்லெட்டைப் பார்த்தாலே அனைவருக்கும், அதை சாப்பிட வேண்டுமென்று மனமானது குதூகலப்படும்.

Friday, October 16, 2015

ஜலதோஷத்தை குணப்படுத்தும் நொச்சி

மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம். நொச்சித் தைலம் பல நோய்களைத் தீர்க்கும் நிவாரணியும் கூட. மேலும் நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும்.

இதன் இலையைச் சட்டியில் போட்டு பிறகு அடுப்பில் சூடு செய்து உடம்பு ஏற்கும் அளவு சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும். வலியுள்ள இடத்தில் துவையலாக அரைத்தும் பூசலாம். மண்ணீரல் வீக்கமும் கட்டுப்படும். நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும்.

மூலநோய்க்கு மருந்தாகும், இரத்தத்தை சுத்தப்படுத்தும் பீர்க்கங்காய்

பொதுவாகக் காய், கனிகள் தமக்குள் உடலுக்குப் புத்துணர்வு தந்து சோர்வினைப் போக்கக் கூடிய பல்வேறு சத்துப்பொருட்களை உள்ளடக்கியுள்ளன. இந்த சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கின்றன. காய், கனிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து நோயற்ற வாழ்வுக்கு வழித் துணையாய் அமைகின்றன.

உள்ளுறுப்புகளுக்கு ஊட்டம் தந்து உற்சாகத்துடன் செயல்படச் செய்கின்றன. பச்சைக் காய்கறிகள் ரத்த நாளங்களில் குறிப்பாக இதயத்தைச் சார்ந்த ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்பட்டு மாரடைப்பு

அதிக நேரம் ஏசியில் இருந்தால் எலும்பு தேயும்

அனைவருக்குமே வைட்டமின் மற்றும் புரதக் குறைபாடு, உடற்பயிற்சிகள் செய்யாமல் இருத்தல், குளிர்சாதன வசதி உள்ள இடத்தில் வேலை செய்தல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்ந்து போகக் கூடும். நமது உடலில் உள்ள எலும்புகள் தேய்வுக்கு உள்ளாகும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் அறிகுறிகள் எதுவும் கிடையாது.

எலும்பு முழுவதும் தேய்வு அடைந்தபிறகுதான் அதற்கான அறிகுறிகள் கொஞ்ச கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பிக்கும். உடல் களைப்பு

தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை சாப்பிட்டால் இரத்த குழாய் அடைப்பு நீங்கும்

மூன்று நாட்கள் தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்

இயற்கையாக கிடைக்க‍க் கூடிய இந்த பேரிச்சம் பழங்களை உட்கொள்ளும் நமக்கு எண்ணிலங்டங்கா பயன்களையும் பலன்களை கொடுக்கும். நல்ல தரமான கொட்டை நீக்கிய பேரிச்சம் பழங்களை எடுத்து

ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுவிட்டு, சுத்த‍மான அசல் தேனை, அப்பழங்கள் மூழ்கும்படி, ஊற்றி மூடி விடவேண்டும்.

நாள் முழுவதும் எனர்ஜியுடன் சுறுசுறுப்பாக இருக்க உதவும் உணவு முறைகள்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள கழிவுகள் சரியான முறையில் வெளியேறும். 30 நிமிட உடற்பயிற்சிகளை காலையில் செய்வது அவசியம். காலை உணவாக புரதம், நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஓட்ஸ், ராகி கஞ்சி, முளை கட்டிய பச்சைப் பயறு, சுண்டல், இட்லி, தோசை போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

வயிற்று புண்ணுக்கு அருந்த வேண்டிய உணவுகள்

பெரும்பாலும் வயிற்றுப் புண்ணில் ஏ.எச் பைலோரி என்ற பாக்டீரியா உள்ளது. அதனால் ஏ.எச் பைலோரி கிருமியை அழிக்கின்ற சிகிச்சைகளை முதலில் செய்ய வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்:

நன்றாக வேக வைத்த சாதம், கஞ்சி, மோர் சாதம்
இட்லி (காரமில்லாத சட்னியுடன்) கீரைகள்,காய்கறிகள்
புளிப்பில்லாத பழங்கள்:- ஆப்பிள் சாத்துகுடி, பப்பாளி.

இட்லி, தோசை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள். அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.

இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளன. அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பரஸ்பரஸ் போன்ற

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். ஆண்மையை

இரத்த சோகையை விரட்டும் வெல்லம்

இரத்தசோகையால் ஆயிரக்கணக்கான பதின்பருவப் பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரத்தசோகையைக் குறைக்கும் ஆற்றல் நிறையவே வெல்லத்தில் உண்டு. இரும்புச் சத்துக் குறைவுதான் இரத்தசோகைக்கு முக்கியக் காரணம். உடல் வெளுக்கும். நகம் வெளுக்கும்.

முகம் வீங்கும். கண் இமை மற்றும் உள் உதடுகளில் வெண்படலம் தெரியும். அடிக்கடி மூச்சுத் திணறும். கை, கால் வலிக்கும். இவை எல்லாம்

நீண்ட ஆயுளை தரும் மருத்துவ தொழில்நுட்பம்

நீண்டகாலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. ஆனால் இதற்கு தேவையான உணவு, காற்று நீர், சுற்றுப்புறம் என அனைத்தும் மாசுபட்டு கிடக்கிறது. இதனால் மனித வாழ்க்கையின் ஆயுள் எண்ணப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மனித வாழ்நாளை தள்ளிப்போட தற்போது நவீன மருத்துவமுறைகள் வந்து விட்டன.

இந்த வகையில் ஒரு மனிதனுக்கு தேவையான மாற்று உடல்

பித்தத்தைக் குறைக்கும் வெள்ளரிக்காய்

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.

வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையும் வெள்ளரியில் உண்டு.

இவற்றைவிட, நம் இத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத்

இதயத்திற்கு நலம் தரும் எண்ணெய் தன்மையான மீன்கள்

சல்மன், வார்டின், மேகரல் trout and herring போன்றவை எண்ணெய் தன்மையான மீன்களாகும். இவற்றில் இருதயத்திற்கு மிகவும் நல்லதான omega-3 fatty acids என்ற கொழுப்பு கூடியளவு உண்டு. குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் ஒமேகா கொழும்பு பெரிதும் உதவுவதால் கர்ப்பணிகளும் பாலுட்டும் தாய்மார்களுக்கும் அவசியமானது.

அத்துடன் ஒமேகா 3 கொழும்பு அமிலமானது உயர் இரத்த அழுதத்தைக் குறைக்கும், குருதிக் குழாய்களில் (நாடிகள் artery) கொழுப்பு படிவதைத்

தினமும் கொழுப்பை உணவில் சேர்ப்பது அவசியமா?

தினமும் ஓரளவு நல்ல கொழுப்பை உணவில் சேர்ப்பது அவசியம். அவை உடல் நலத்திற்கு நல்லதுசெய்யும்.

அத்தகைய கொழுப்பு மீனிலுள்ள கொழுப்பு, கொட்டைகள், விதைகள். அவகாடோ பழம், ஆலிவ் ஆயில், சூரியகாந்தி எண்ணெய், கோர்ன் எண்ணெய் போன்ற பலவற்றிலும் உண்டு.

அத்தகைய கொழுப்புகள் ஏன் அவசியம்

அவற்றில் விட்டமின் E, செலினியம் உட்பட பல அன்ரி ஒட்சிடனட்ஸ் (antioxidants) உண்டு

மீதமாகும் உணவை வீணாக்காதீர்கள்

இன்று (வெள்ளிக்கிழமை) உலக உணவு தினம். உலக உணவுதினம் என்பது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16-ந்தேதி கொண்டாடப்படுகின்றது. உணவு, உழவு இவற்றுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஐ.நா. சபையால் இது கொண்டாடப்படுகின்றது. உணவு பாதுகாப்பு, உலக உணவு, உலக உழவு முன்னேற்றம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து இதனைக் கொண்டாடுகின்றன.

சுமார் 150 நாடுகளில் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியின் மூலக் கருத்து உலகில் வறுமையையும், பசியையும் நீக்க வேண்டும் என்பதுதான்.

கை கழுவுவதால் மட்டும் பாக்டீரியா விலகாது

கழிப்பறை கதவில் தொடங்கி பேருந்து கைப்பிடி வரை பல இடங்களிலிருந்து கிருமிகள் எளிதாகப் பரவுகின்றன. பொதுவாகவே நமது உடலின் மேல் பகுதியில் ‘கமன்சல்ஸ்’ என்ற பாக்டீரியாக்கள் அதிகம். சுற்றியுள்ள காற்று, உட்கொள்ளும் இறைச்சி போன்றவற்றாலும் பாக்டீரியாக்கள் கைகளில் தொற்றிக்கொள்ளும். தொடர்ந்து உடலின் பல பகுதிகளுக்குப் பரவும்.

விரைவில் எண்ணிக்கையில் பெருகி நோய்களை ஏற்படுத்தும். கைகழுவுவது இத்தகைய பாதிப்புகளை தடுக்கிறதா என்று

Tuesday, April 21, 2015

உடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்

புரதம் மனிதனுக்குத் தேவையான முக்கிய உணவு. இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியம். செரிமானத்தின் போது வயிற்றில் புரதம் சிறு துகள்களாக உடைக்கப்படுகின்றது. புரதத்திலிருக்கும் அமினோ அமிலங்கள் உடலுக்கு சத்துணவாகின்றன.

இந்த அமினோ அமிலங்கள் பல பிரிவு உண்டு. சில புரத உணவுகளில் பெரும்பாலும் அனைத்தும் கிடைத்து விடும். அசைவ உணவு, பால் பொருட்கள், மீன், முட்டை இவை ஒரு பிரிவு. தாவர வகையில் முழு தானியங்கள், பருப்புகள், கொட்டை என பிரிவுகள் உண்டு. உடலில் நீருக்குப் பிறகு அதிகம் இருப்பது புரத சத்துதான்.

ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும் கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும். கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.

கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும். கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்

ஆஸ்துமா எனப்படும் நீண்ட கால நுரையீரல் பாதிப்பு நுரையீரலில் உள்ள காற்றுக் குழாய்களை குறுக்கி விடுகின்றது. இது அடிக்கடி ‘வீஸிங்’ எனப்படும் சத்தமான மூச்சு (விசில் சத்தம் போல), மூச்சுத் தவிப்பு, நெஞ்சிருக்கம், இருமல் போன்ற வெளிப்பாடுகளை ஏற்படுத்துகின்றது. இருமல், இரவிலும், விடியற்காலையிலும் ஏற்படும்.

ஆஸ்துமா எந்த வயதினரையும் பாதிக்கும் என்றாலும், குழந்தை பருவத்திலேயே அநேகமாக ஆரம்பித்து விடுகின்றது. ஆஸ்துமாவை அறிந்துக்கொள்ள முதலில் நாம் மூச்சுக் குழாய்களைப் பற்றியும்,

நடைப்பயிற்சி முடித்தவுடன் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

உடலில் உள்ள கலோரிகள் நடைப்பயிற்சி செய்யும்போது கரையும். இதனால்தான் பசியெடுக்கிறது. இந்த நேரத்தில் அதிகமான கலோரி கொண்ட உணவை சாப்பிட்டால் நிச்சயம் எடை அதிகரிக்கும். சராசரி எடை, உயரம் உள்ள ஒருவருக்கு தினம் 2,400 கலோரி போதுமானது. இதை மனதில் கொண்டு சாப்பிடுங்கள்.

வாக்கிங் முடிந்து வரும்போது ஜூஸ், மோர் போன்றவற்றை அருந்தலாம். அதிகம் சர்க்கரை சேர்த்த ஜூஸ், திக்காக இருக்கும் தயிர் போன்றவற்றை

கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர்

கோடை வெயிலுக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், மோர், தயிருக்கு இணையாகாது. இதில், தயிரை ரொம்ப ஜில்லென்றும்

சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.

கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது எனஆயுர்வேதத்தில் ஒரு பட்டியலே சொல்லப்படுகிறது. தயிரோடு ஒப்பிடும்போது மோர் மிகவும் சிறந்தது. வெறுமனே தயிரில் தண்ணீர்
ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரி பங்கு தண்ணீரைச்
சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

வெயில் காலத்தில் குழந்தைகளில் பாதுகாப்பு

பெற்றோர், குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். தகுந்த காலங்களில் தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு ஆளாகின்றனர். வெயில் காலங்களில், ஈரத்தன்மையுள்ள பொருட்களில், கிருமிகள் மிக வேகமாக வளரும் என்பதால், பழம், காய்கறி நறுக்கிய கத்திகள், சமைக்கும் பாத்திரங்களை, ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், குழந்தைகளை வெளியில் விளையாடுவதை தடுத்து, கேரம், செஸ், போன்ற

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உடனடியாக செய்ய வேண்டியது

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து

வெயில் காலத்தில் தினம் ஒரு கீரையை உணவில் சேருங்க

உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம்.

ரத்தசோகை பிரச்சனைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரைதான். கீரைகளை வாங்கும் போது கீரைகள் ஃப்ரெஷ்ஷாக இருப்பதை பார்த்து வாங்க வேண்டும். கீரைகள் வாடி வதங்கி இருக்கக் கூடாது. பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்த்தி விடுவது நல்லது.

கீரையை உபயோகப்படுத்தும் முறைகள் :

• கீரைகளை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும். பூச்சிகள்,

அன்னாசிப்பழம் பயன்பாடுகள்

எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது.

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல்

தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

சிலர் சாப்பிடும் காய்கறிகளை தோலுரித்துவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால் சிலரோ காய்கறிகளை தோலுடன் சாப்பிட்டால் தான் நல்லது என்று சொல்வார்கள். ஏனெனில் காய்கறிகளின் தோல்களில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது.

குறிப்பாக ஒருசில காய்கறிகளின் தோல்களில் நார்ச்சத்துக்களும், இதர ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. அதற்காக தோல் கசப்பாக இருந்தால், அதனை சாப்பிடக்கூடாது. அப்போது அந்த தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். முக்கியமாக இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு செழிப்பாக விளைய வைத்த ஆர்கானிக் காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்கி சாப்பிட வேண்டும்.

• கேரட்டின் தோலில் பீட்டா கரோட்டீன் மற்றும் பீனோலிக் போன்ற

தூக்கம் வருவதற்கு சப்போட்டா பழம்

இனிப்பு சுவை அதிகமுள்ள சப்போட்டா பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் நிறைந்துள்ள சப்போட்டா பழம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இந்த பழத்தில் நார் சத்து உள்ளதால் செரிமானத்துக்கு உதவுகிறது. புரோட்டின், இரும்பு சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது.

கண்பார்வையை அதிகரிக்கும். தோல் பாதிப்படையாமல் பாதுகாக்கும் சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள் இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நலன் பயக்கும்.

சுட்டெரிக்கும் வெயில் காலத்தினை சமாளிக்க டிப்ஸ்


கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் அதாவது இந்த வாரத்தில்தான் தொடங்கும். மே மாதம் வெயில் அளவு உச்சக்கட்டத்தில் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த மாதமே வெயில் தன் உக்கிரத்தைக் காட்டத் தொடங்கி விட்டது. தற்போது கத்திரி வெயில் காலம் போல வெயில் வாட்டி வதைக்கிறது.

வெயில் உக்கிரமாகி வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. 'சுள்'ளென்று அடிக்கும் வெயில் மண்டையை பிளந்து விடும் போல உள்ளது. அனல் காற்று உடம்பு முழுவதும் பரவி 'தகதக'வென எரிய வைக்கிறது. இதனால் சாதாரணமாக வெளியில் சென்று வந்தாலே

தினமும் ஒரு வேளை முளைதானிய உணவை சாப்பிடுங்க

இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 – 10 மணிக்குள்

உயிரை குடிக்கும் சிகரெட் உயிரை குடிக்கும் சிகரெட்

ஒரு 'தம்' போட்டாத்தான் வேலை ஓடும். ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... இதோ வந்து விடுகிறேன் என்று பெரிய பெரிய அதிகாரிகள் வரை அவ்வப்போது எழுந்து சென்று வருவதை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். சிகரெட்டை பற்ற வைத்து... இழுத்து.... வாய்க்குள் சூழும் புகையை சுருள் சுருளாய் வெளியே ஊதி விடும்போது அதென்னவோ இதயமே இலகுவாகி விட்டது போன்ற ஒரு மிரமை ஏற்படுகிறது.

மெத்த படித்தவர்களை கூட மொத்தமாய் கட்டி போட்டு இருக்கும் மோக பேய்கள்தான் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள்.

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் புதிய தகவல்

மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப்–2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்நோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப்–2 நீரிழிவு நோய்

பழுப்பு அரிசியே ஆரோக்கியத்திற்கு நல்லது

வெள்ளையனை மட்டுமல்ல வெள்ளை அரிசியையும் வேண்டாம் எனச் சொன்னவர் மகாத்மா காந்தி. ‘பழுப்பரிசியே நல்லது‘ என 70 வருடங்களுக்கு முன்பே அவர் வலியுறுத்தினார். உணவுப்பற்றாக்குறை குறித்த பெரும் விவாதங்கள் நடைபெற்று வந்த காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் ஆலையில் அரைத்த, குருணை அற்ற, வெளுத்த அரிசியை மட்டும் விநியோகிக்கச் சொல்கின்றர்.

ஏறத்தாழ 10 சதவிகிதம் அரிசி வீணாகிறது என்று நெல் விவசாயிகள் வருந்திச் சொல்கின்றனர். எனவே பழுப்பு கைக்குத்தல் அரிசிதான் நல்லது. அதைச் சாப்பிடுங்கள் என்று கூறினார். பழுப்பரிசி எனும் பிரவுன்

இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்

• தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேங்காய் எண்ணெய் 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலம் (Fatty acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. தினமும் 2 முதல் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது.

• காபி : காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்காவிட்டால் பலருக்கு அன்றைய பொழுதே தொடங்காது. காபியில் உள்ள ‘கேஃபஸ்டால்’ (Cafestol), கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய

சர்க்கரை நோயாளிகளின் உன்னதமான உணவு வெள்ளரிக்காய்

வெள்ளரியில் அதிக அளவிலான விட்டமின் கே சத்து அடங்கியிருக்கின்றது. இது எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவுகின்றது. விட்டமின் கே அல்ஸைமர் என்னும் மறதி நோய் வராத வண்ணம் மூளை நரம்புகளுக்கு ஊட்டசத்தாகவும் விளங்குகின்றது.

* 100 கிராம் வெள்ளரியில் 96 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து அடங்கியுள்ளது. சாதாரண நீரை விட பல்வேறு ஊட்டசத்துக்களை இது உள்ளடக்கி இருப்பதால் கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தையும், வியர்வையால் ஏற்படும் சோர்வையும், வெயிலின் கொடுந்தாக்கத்தால் ஏற்படும் மூளை வறட்சி அதனால் உண்டாகும் மயக்க நிலை இவற்றினின்று விடுதலை தரும் வகையில் விரட்டியடிக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறது.

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்

* வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது.

* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

* 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகள்

உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம். அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ...

மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற

Tuesday, March 31, 2015

உடல் நலத்துக்கு தேவை கார்போஹைடிரேட்

‘டயட்டிங்’ என்ற பெயரில் அடியோடு கார்போஹைடிரேட் உணவை தவிர்ப்பவர்களுக்காகவும், கார்போஹைடிரேட் உணவை எப்படி,

எதற்காக, ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கவும் நமது டாக்டர் கமலிஸ்ரீபால் இந்த கட்டுரையை உங்களுக்காக

வழங்குகிறார்.

எப்பொழுதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பது தவறு.

அதேபோல் ஒரேடியாக உணவை, குறிப்பாக கார்போஹைடிரேட்

சாப்பிட்டு முடித்ததும் சூடாக தண்ணீர் அருந்தலாமா?

சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில்

காபி குடிப்பது உடலுக்கு நல்லதா?

காபி நமது அன்றாடப் பானங்களில் ஒன்று. பொதுவாக பல்வேறு வேதிப்பொருட்கள் கலந்ததே காபி. அவற்றில், 'காபின்' என்ற குறிப்பிட்ட வேதிப்பொருள்தான் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதேசமயம், நம் மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, புத்துணர்வு அடையவும் செய்கிறது.

காபியில் உள்ள சில வேதிப்பொருட்கள் 'பார்கின்சன்' நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. இன்சுலின் சுரக்கச் செய்வதால், காபி குடிக்கும் பழக்கம், இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கலாம். தினமும் 2 கப் காபி குடிப்பவர்கள் 14

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு

பிரேக் பாஸ்ட்’ என்பதன் பொருள் இரவு முழுவதும் சுமார் 10 மணி நேரம் உண்ணாமல் இருப்பதை உணவு உட்கொண்டு முடிப்பதாகும். இன்றைய நாகரீக அவசர உலகில் பலர் காலை உணவை தவிர்த்தே விடுகின்றனர்.

அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை அறிந்து, அனைவரும் இனி காலை உணவை கண்டிப்பாக உண்ண வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பண்டைய காலங்களில் காலை உணவு என்பது இடத்திற்கு ஏற்றார் போல் மாறுபட்டது. மேற்கத்திய நாடுகளில் பிரட், சீஸ், கொட்டைகள் போன்ற உணவுகள் இருந்தன.

முதுகுவலி, மூட்டுவலியை விரட்ட எளிய வழி

“முதுகுவலி, மூட்டுவலி என்று உடம்பில் தோன்றும் எந்த வலியையும் மருந்து, மாத்திரை, தைலம் ஏதுமின்றி, எளிய பயிற்சியின் மூலமே போக்கிவிடலாம்’’ என்கிறார், உடல் தோற்ற ஒழுங்கமைப்புச் சிகிச்சை (Posture Alignment Therapy) நிபுணரான டாக்டர் பரத் சங்கர். பா.ஜ.க. தலைவர் அத்வானி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா போன்றோருக்குச் சிகிச்சை அளித்தவர் இவர்.

புதிய சிகிச்சை முறையில் எவ்வாறு வலியைப் போக்கலாம் என்பது குறித்த பரத் சங்கரின் விளக்கக் கட்டுரை... ‘‘உடம்பில் ஓர் இடத்தில் ஏற்படும் வலி என்பது உடம்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து

வாய்ப்புண், சிறுநீர்த் தடைக்கு சிறந்த மருந்து மணத்தக்காளிக் கீரை

மணத்தக்காளி, தானாகவே தோட்டங்களில் வளரும் ஒருவகைச் செடி. இதன் இலை மற்றும் காய் மருத்துவக் குணம் வாய்ந்தது. மணத்தக்காளியின் பழம் கறுப்பாக மிளகு போல இருப்பதால் இதனை ‘மிளகு தக்காளி’ என்றும் கூறுவர்.

மணத்தக்காளியின் காய், மார்பில் சேரும் கோழை, இருமல் மற்றும் இளைப்பை நீக்கும். வாயில் ஏற்படும் புண் மற்றும் உடல் சூட்டைப் போக்கும். இந்தக் கீரையில் ரிபோபிளோவின், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புத் தாதுக்களும் உள்ளன. மணத்தக்காளி வாய்ப்புண்ணை தீர்க்கக் கூடியது.

சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள்

சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் உருவாகி நகரும் வரை எந்த அறிகுறியினையும் ஏற்படுத்தாது.

சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள்:

* விலா எலும்பின் கீழ், பின்புறம், பக்கவாட்டில் வலி ஏற்படும்.

* இந்த வலி அடி வயிறு தொடைமடிப்பு வரை பரவும்.

* சிறுநீர் வெளியேறும் பொழுது வலி ஏற்படும்.

* சிவப்பு, ப்ரஷன் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

* நாற்றமுடைய சிறுநீர் வெளியாகும்.

உடல் உஷ்ணத்தை தணிக்கும் கோவைக்காய்

உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பயிர் செய்யப்படுகின்ற பயனுள்ள மூலிகையாகவும் உணவு பொருளாகவும் கோவை விளங்குகின்றது. காய்ச்சலைப் போக்கும் தன்மை கோவைக்கு உண்டு. தாய்ப்பால் பற்றாத போது இளந் தாய்மார்களுக்கு பால் சுரக்கச் செய்வது, கோவையின் வேர் வாந்தியை நிறுத்தும் வல்லமை வாய்ந்தது.
கோவை இலைச்சாறு கடும் வலியைத் தணிக்கக் கூடியது. கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது. கோவை இலை தோல் நோய்களுக்கு மேற்பூச்சு மருந்தாகிறது. தோலில் உண்டாகும் அரிப்பு,

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...