Saturday, September 24, 2016

கம்பீரமாக வாழ கம்பு

நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய ஒரு தானியம் கம்பு. சிறந்த சத்துக்கள் கொண்ட இது வசதியற்றோருக்கு உதவும் சிறு தானியமாக ஒரு காலத்தில் இருந்தது. இன்று உடல் நலம் காக்க வேண்டி அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றது. 
அதிக நார்சத்து மிகுந்தது என்பது இதன் கூடுதல் சிறப்பு அம்சம். 

இதில் நோய்களை எதிர்க்கும் ரசாயனங்கள் உள்ளன. 

* கொழுப்பை குறைக்கின்றது. 

* நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கின்றது. 

* ஃபோலேட், இரும்பு, மக்னீசியம், காப்பர், ஸிங்க், வைட்டமின் ஈ, பி சத்து பிரிவு, தயமின், ரிபோ ஃளேவன், நியாசின் சத்துக்கள் கொண்டது. 

ஏப்பம் செரிமானத்தின் அறிகுறியா?

ஏப்பம் வெளிப்படுதல் என்பது செரிமானத்தின் அறிகுறியாக நம்பப்படுகிறது. அதே வேளையில், பொது இடங்களில், இயல்பை மீறி அளவு கடந்த ஏப்பம் வெளிப்படுவது அநாகரிக செயலாகவே அடையாளம் காணப்படுகிறது.

ஏப்பம் எதனால் வருகிறது? அது செரிமானத்தின் அடையாளமா? ஏப்பத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடையை கீழே பார்க்கலாம்.

‘‘நாம் உணவு சாப்பிடும்போதும், தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீர் அருந்தும்போதும், சிகரெட் பிடிக்கும்போதும், மூச்சை இழுக்கும்போதும் ஏராளமான காற்று நமது வயிற்றினுள் செல்கிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

கொசுக்கடியால் பரவும் டெங்கு வைரஸ் டெங்கு ஜுரத்தினை உண்டாக்குகின்றது. பாதிக்கப்பட்ட 3-4 நாட்களில் ஜுர அறிகுறிகள் தெரியும். தலைவலி, உடல் வலி என்று ஆரம்பிக்கும் இது 2-4 நாட்களுக்குள்ளும் கட்டுப்படலாம். சிலருக்கு ரத்த கசிவினை ஏற்படுத்தி ஆபத்தான நிலையிலும் கொண்டு விடலாம். ஜுரத்தினால் குறைந்த அளவு ப்ளேட்லட்ஸ் எண்ணிக்கை ரத்தத்தில் ஏற்படும் பொழுது, ரத்த அழுத்த நிலை அதிகம் குறையும் பொழுது இது உயிரிழப்பு வரை கொண்டு செல்ல முடியும்.

நாவற்பழத்தின் நன்மைகள்

நாவற்பழம் நாம் அன்றாடம் சாப்பிடும் பழம் அல்ல. ஆனால் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.

நாவற்பழத்தின் விதைகள் நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லவை. இதன் விதைகளை நிழலில் உலர்த்தித் தூள் செய்து, தினமும் காலை, மாலை இரு வேளைகளில் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

Sunday, September 4, 2016

பாகற்காய் மலச்சிக்கலை தீர்க்கும்

மூலத்தினால் உண்டாகும் எரிச்சல் மற்றும் ரத்தைபோக்கை கட்டுப்படுத்தக் கூடியதும், மலச்சிக்கலை தீர்க்கவல்லதும், வயிற்று புழுக்களை வெளியேற்ற கூடியதும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக  விளங்குவதுமான பாகற்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். 
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பாகற்காய் மிகுந்த கசப்பு சுவை உடையது. கசப்பாக இருந்தாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது. பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நார்ச்சத்து கிடைக்கிறது. மலச்சிக்கலை

துளசி காய்ச்சலை குணப்படுத்தும்

காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது பல துன்பங்கள் வருகின்றன. தொண்டைக்கட்டு, உடல் வலி, பசியின்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம். கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, மிளகுப்பொடி, பனங்கற்கண்டு. கீழாநெல்லியின் இலை, தண்டு, காய் உள்ளிட்டவற்றை ஒருபிடி அளவுக்கு

தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்

தலைமுடி அழகுக்கு அடையாளமாக விளங்குகிறது. இளமையில் ஏற்படும் வழுக்கை, இளநரையால் மன உளைச்சல் ஏற்படுகிறது. பொடுகு, முடிகொட்டுவது உள்ளிட்ட பிரச்னைகளை போக்குவது, முடி கருமையாக வளர்வதற்கான தைலம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.     
சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி முடிகொட்டுவதை தடுக்கும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம், நல்லெண்ணெய், ஜடாமாஞ்சில். ஒரு

உடல் பருமனை குறைக்கும் கொள்ளு

உடல் பருமனால் பல்வேறு தொல்லைகள் வருகிறது. மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்றவை ஏற்படும். உடல் உழைப்பு இல்லாதது, அதிக கவலையால் உடல் பருமன் ஏற்படும். இது, சங்கடமான நிலையை ஏற்படுத்தும். உள் உறுப்புகள் விரைவில் சோர்ந்து போகும். உடல் பருமனை தடுப்பது அவசியம். உடல் வியர்க்கும்படி 30 நிமிடங்களாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது அவசியம். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், உடல் பருமனை குறைப்பது குறித்து பார்க்கலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கான கஞ்சி தயாரிக்கலாம். 

உயிரணு குறைபாடுகளை போக்கும் முருங்கை

ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைபாடு ஏற்படுவதால் குழந்தை இல்லாமல் போகிறது. இப்பிரச்னையை சரிசெய்வது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். முருங்கை பூவை பயன்படுத்தி உயிரணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பசு நெய், முருங்கை பூ, பால், பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விடவும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூ சேர்த்து வதக்கவும். பால் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

Friday, September 2, 2016

எந்தெந்த பழங்களில் அதிகளவு இரசாயனம் கலந்துள்ளது

இன்று நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான காய்கள் மற்றும் பழங்களில் பல இராசயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. நாம் இன்றைக்கு உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்கள் எந்த அளவு பாதகம் விளைவிப்பதாக உள்ளன என்பதை கீழே பார்க்கலாம்.

“திராட்சைக் கொத்துகள் ரசாயன உரங்களில் முக்கி எடுக்கப்படுவதால் தான் திராட்சை மீது வெள்ளைப் படிமம் இருக்கிறது. இது உடல்நலத்துக்கு கேடானது. திராட்சை மட்டுமல்ல... இன்றைய சூழலில் நாம் சாப்பிடுகிற அத்தனை உணவுப் பொருட்களுமே விஷம்தான்’’. 

வாழை :

ஏழைகளின் நண்பன் என்று சொல்லும வாழைப்பழங்களை விரும்பிச் சாப்பிடுகிறோம். எத்திலின் வாயுதான் வாழையை இயல்பாகப் பழுக்க வைக்கிறது. அடைக்கப்பட்ட ஒரு அறைக்குள் வாழைப் பழங்களை வைத்து, அதனுள் எத்திலினை செயற்கையாகத் திணிக்கிறார்கள்.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் ஜவ்வரிசி

ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்

ஜவ்வரிசி என்றாலே நாம் சாப்பிடக் கூடிய பாயாசம் நம் மனக் கண்களுக்கு முன் சட்டென்று வந்து போகும். ‘சாகோ பாம்’ என்ற ஒரு வகைப் பனைமரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது.

கார்போஹைட்ரேட் எனும் சத்து அதிகமுள்ள ஜவ்வரிசி ஒரு ஆரோக்கியமான உணவாகும். பாயாசம் தவிர, கேக், உப்புமா மற்றும் சூப்புகளிலும் ஜவ்வரிசி பயன்படுத்தப்படுகிறது.

ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும் காய்ந்த திராட்சை

காய்ந்த திராட்சை, உலர்ந்த திராட்சை என்று அழைக்கப்படுபவை, பழமாக இருந்த திராட்சையை காய வைத்து பதப்படுத்துவதால் கிடைப்பதே! 4 டன்னுக்கும் மேலாக உள்ள திராட்சைப் பழங்களைக் காயவைத்தால், கிட்டத்தட்ட ஒரு டன் காய்ந்த திராட்சை கிடைக்கும்.

திராட்சைப் பழங்களில் பலவகைகள் இருக்கின்றன. ஆனால் எல்லா வகை திராட்சைப் பழங்களைக் காய வைத்தாலும், ருசியான, சத்தான, காய்ந்த திராட்சை கிடைக்காது. அதிக இனிப்புள்ள திராட்சைப் பழங்கள் மட்டுமே, காய்ந்த திராட்சை தயாரிப்பதற்கு ஏற்றதாகும்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளை

பொதுவாக பழங்கள் நமக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குபவை. உடலுக்கும், சருமத்துக்கும் தீங்கு விளைவிக்காதவை.

ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்திலும் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றன.

மாதுளம்பழத்தில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

ஆண்கள் சேவிங் செய்யும் முன் இதை கவனிங்க

ஆண்கள் ஷேவிங் செய்யும் முன், முகத்தை சுடுநீரில் கழுவி, துணியால் துடைக்காமல் அப்படியே விட வேண்டும். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து, ஷேவிங் செய்யும் போது ஈஸியாக முடி வெளிவந்துவிடும்.

* பின் ஷேவிங் ஜெல்லை முகத்தில் தடவி 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஷேவிங் க்ரீம் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, ஷேவிங் செய்யும் போது முடி எளிமையாக வெளிவரவும் உதவும். ஒருவேளை உங்களுக்கு தாடி அதிகம் இருந்தால், ஷேவிங் க்ரீமை அதிகம் தடவி ஊற வையுங்கள்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...