Sunday, September 11, 2022

உங்கள் சிந்தனைக்கு

 
இறைவனின் படைப்பில் அதிசயிக்கத்தக்க ஒரு படைப்புதான் மனித மூளையாகும். மிருகங்களுக்கும் மூளை இருக்கின்றன ஆனால் அவற்றினால் இவ்வுலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. மனிதனது மூளை மட்டுமே தொடர்ந்தும் காலத்தைக் கடைந்து கச்சிதப்படுத்திக் கொண்டிருக்கின்றது!
உலகைக் கடைந்து உருவகப்படுத்தும் திறமையும் அதற்குண்டு, அதேநேரம் உலகை உருக்கி உருக்குலைக்கும் அபாய சக்தியும் அதற்குண்டு! எதிர்கால சமுதாயத்தைக் காக்க வல்ல றஹ்மானே போதுமானவன்.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்டது

 
கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா? அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?
புரியாத புதிராய் நம் வாழ்க்கை நடை போட
நாட்டு நடப்புக்கள் நம் மண்டையை நறை போட
இறத்தக் களரிகள் இதயத்தைத் துளை போட
இங்கிதமற்ற வாழ்க்கை மட்டும் நமை இம்சைப் படுத்துகின்றது!

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...