Friday, September 26, 2014

வாழ்வை அழகாக்கும் அன்பான பார்வை

தம்பதிக்குள் பிரச்சனை வரும் போது, இருவருக்குமான பேச்சுவார்த்தை பலப்படுத்தப்பட வேண்டும். கோபப்படாத, வன்முறையில்லாத பேச்சுவார்த்தை அவசியம்தான். பிறவியிலிருந்தே, நமக்கெல்லாம் ஒரு குணம் உண்டு. யாராவது நம்மைத் திட்டினாலோ, தாக்கிப் பேசினாலோ, உடனே அதை எதிர்ப்போம்.

அவர்கள் சொல்வது சரியா, தவறா என ஆராய்கிற மனப்பக்குவம் கூட நமக்கு இருக்காது. இதே அணுகுமுறைதான் கணவன் - மனைவிக்கு இடையிலும் நடக்கிறது. கணவன் - மனைவிக்கிடையிலான பிரச்சனைகளின் போது, எப்போதும் எதிராளியின் மீதுதான் தவறு, நாம் செய்தது சரி என்கிற எண்ணம் அழுத்தமாகவே இருக்கும்.

நடந்த தவறில் நம் பங்கு என்ன என யோசிக்க மாட்டோம். அன்பு

ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை

கல்யாணமுருங்கையில் ஏராளமான மருத்துவகுணம் உள்ளது. இது துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது. இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது.

பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும். இலைகள் பேதி மருந்து சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும், பால் உற்பத்திக்கு நல்லது. மாதவிடாய் போக்கை அதிகப்படுத்தும். தண்ணீர் கட்டிகளுக்கும், மூட்டுவலிக்கும் பற்றாகப் பயன்படும்.

இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர

காலிஃப்ளவர் புற்றுநோய் வருவதை தடுக்கும்

ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.

காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது. காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய்,

இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால்

பிரிட்ஜில் உணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் வைக்கலாம்

இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.

வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது.

பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு

ஏலக்காய் இதயத்துடிப்பை சீராக்கி, ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும்

ஏலக்காய் என்பது நம் அடுக்களையில் இனிப்பு காரம் என்கிற எவ்வகை உணவுக்கும் மணம் சேர்ப்பதற்குத் தான் பயன்படுகிறது என்று நம்மில் பலர் இது நாள் வரை எண்ணி வந்தோம். இந்தக் கட்டுரையின் மூலம் அதன் மகத்தான மருத்துவ குணங்களையும் நாம் தெரிந்து கொள்வோம்.

ஏலக்காய் ஒரு அகட்டு வாய்வு அகற்றி ஆகும். வாந்தியை மற்றும் குமட்டலைப் போக்கக் கூடியது. பசியைத் தூண்ட கூடியது. அல்லது அதிகரிக்கச் செய்வது. பிடிப்பைப் போக்கக் கூடியது. அல்லது கடுப்பைக் கண்டிக்கக் கூடியது. நுண்கிருமிகளைஅழிக்க வல்லது. மூச்சிரைப்பைத் தணிக்க கூடியது.

ஜாதிக்காய் செரிமான பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது.

ஜாதிக்காய் என்பது ஒரு காரமான, சூடான மற்றும் இனிப்பு சுவை கொண்ட மசாலா பொருளாகும். இது உங்களுடைய சாப்பாட்டிற்கு சுவை, மணத்தை மட்டும் கொடுப்பதில்லை அதோடு உடல் நலத்திற்கு பல வழிகளில் ஊட்டத்தையும் அளிக்கிறது.

* ஜாதிக்காயில் உள்ள எண்ணெய் மூட்டு வலி குணமாக உதவுகிறது. மேலும் வலி, வீக்கம் உள்ள இடத்தில் இந்த எண்ணெயை தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* ஜாதிக்காயில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளது. இது நம்முடைய உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

* ஜாதிக்காயை தூளாக்கி அதனுடன் தண்ணீர் அல்லது தேன் கலந்து

கிராம்பு தோல் புற்றுநோயை தடுக்கும்

இலவங்கம் கிராம்பு என்றும் அழைக்கப்படுகிறது. கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது.

உள் உறுப்புக்களைத் தூண்டக் கூடியது, வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது, வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கூடியது,

வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக்

பாகற்காய் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

உலக மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் உணவு உண்ணும் முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுபடுத்த பாகற்காய் பெரிதும் உதவுகிறது.

பாகற்காய் இலை, காய், விதைகளில் தாவர இன்சுலின் என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயாளிகளுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...