Thursday, May 23, 2013

சர்க்கரை நோயளிக்கு புழுங்கல் அரிசி மருந்தே உணவு

தமிழ்நாட்டில் காலம் காலமாக தமிழர்கள் 2 வகை அரிசி சாப்பிட்டு வருகிறார்கள். பச்சரிசி, புழுங்க அரிசி என்ற அந்த இரண்டுக்கும் தனித்தனி சிறப்புத் தன்மைகள் உண்டு. தமிழர்கள் மருந்தே உணவு, உணவே மருந்து என்ற அடிப்படையில் வாழ்ந்தவர்கள்.

பச்சரிசி உணவை சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை உடனே ரத்தத்தில் கலந்து விடும். இதனால் தான் உடனடி சத்து தேவைக்காக பச்சரிசி உணவை உண்ணச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். வளரும் குழந்தைகளுக்கு பச்சரி உணவு தான் ஏற்றது.

ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதை உண்ணக் கூடாது. புழுங்கல் அரிசியை உணவாக கொண்டால் அதில் உள்ள சர்க்கரை மெருவாகத் தான் ரத்தத்தில் கலக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் புழுங்கல் அரிசியை உண்ணலாம்.

கறிவேப்பிலை இளநரையை கட்டுப்படுத்துகிறது

சமையல் சுவையைக் கூட்ட உதவும் கறிவேப்பிலை கடைகளில் காய்கறி வாங்கும் போது கொசுறாகவும் கிடைப்பதாலோ என்னவோ அதன் அருமை பெருமை பலருக்கும் தெரிவதில்லை. உணவுச் செரிமானத்துக்கு ஓர் உன்னதமான பொருளாக விளங்குகிறது கறிவேப்பிலை.

வைட்டமின் ஏ சுண்ணாம்பு சத்து போலிக் ஆசிட் போன்றவை இதில் நிரம்பி உள்ளன. இரும்புச்சத்தை மிகைப்படுத்தி உடலுக்கு உறுதியைக் கொடுக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத்தாது அடர்த்திக் குறைவு நோய் முதுமைப் பருவத்தில் வருவதைத் தடுக்கிறது.

கெட்ட கொழுப்பை கரைத்து பட்டழகை கொடுக்கிறது. பூச்சிக்கடி ஒவ்வாமையால் தோலில் ஏற்படும் அரிப்பைத் தணிக்கிறது.

கோடைக்கு கொடையாகும் பழங்கள்

கோடை கடுமையானதுதான். ஆனால் அதற்கேற்பச் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் கோடையின் கொடுமையில் இருந்து தப்பித்துவிட முடியும். அந்த வகையில் சில பழங்கள் நமக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன. அவை பற்றி...

* தர்பூசணி: தற்போது எங்கும் கிடைக்கும் தர்பூசணி, தாகத்தைத் தணிக்கும். பசியைப் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடி வயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறு நீரகக் கோளாறுகள், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவும். உடலுக்குக் குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும்.

* ஆரஞ்சு: பசியைத் தூண்டவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படுகிறது. ஆரஞ்சை ஆயுர்வேத வைத்திய முறை பெரிதும் பயன்படுத்துகிறது. ஆரஞ்சு

தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக


கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

* சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும்.

வீட்டு மருத்துவ குறிப்புகள்


• நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.

• வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை


ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.

• மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

• வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...