தினமும் மூன்று கப் காபி அருந்துவதன் மூலம் கல்லீரல் புற்றுநோயை 50 சதவிகிதம் குறைக்கமுடியும் என்று ஒரு புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஈரல் செல்லியல் புற்றுநோய் ஆபத்தை 40 சதவிகிதம் வரை குறைக்கக்கூடும் என்றும் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ அமைப்பின் சார்பில் வெளிவரும் அமெரிக்க மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் தோன்றும் பொதுவான புற்றுநோய்களில் கல்லீரல் புற்றுநோய் ஆறாவது இடத்தைப் பிடிக்கின்றது. மற்றும் இறப்பிற்கான புற்றுநோய் காரணங்களில் இது மூன்றாவது இடத்தைப் பிடிக்கின்றது. இதிலும் ஈரல் செல்லியல் புற்றுநோய் என்பது உலகம் முழுவதிலும் காணப்படும் புற்றுநோயில் 90 சதவிகிதம் காணப்படுவதாகும்.
உலகில் தோன்றும் பொதுவான புற்றுநோய்களில் கல்லீரல் புற்றுநோய் ஆறாவது இடத்தைப் பிடிக்கின்றது. மற்றும் இறப்பிற்கான புற்றுநோய் காரணங்களில் இது மூன்றாவது இடத்தைப் பிடிக்கின்றது. இதிலும் ஈரல் செல்லியல் புற்றுநோய் என்பது உலகம் முழுவதிலும் காணப்படும் புற்றுநோயில் 90 சதவிகிதம் காணப்படுவதாகும்.