Tuesday, April 21, 2015

நடைப்பயிற்சி முடித்தவுடன் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

உடலில் உள்ள கலோரிகள் நடைப்பயிற்சி செய்யும்போது கரையும். இதனால்தான் பசியெடுக்கிறது. இந்த நேரத்தில் அதிகமான கலோரி கொண்ட உணவை சாப்பிட்டால் நிச்சயம் எடை அதிகரிக்கும். சராசரி எடை, உயரம் உள்ள ஒருவருக்கு தினம் 2,400 கலோரி போதுமானது. இதை மனதில் கொண்டு சாப்பிடுங்கள்.

வாக்கிங் முடிந்து வரும்போது ஜூஸ், மோர் போன்றவற்றை அருந்தலாம். அதிகம் சர்க்கரை சேர்த்த ஜூஸ், திக்காக இருக்கும் தயிர் போன்றவற்றை உட்கொண்டால் எடை கூடும். சர்க்கரையும் பாலும் கலந்த மில்க்ஷேக் வகைகளைத் தவிர்த்து விட்டு, குறைவான சர்க்கரை கொண்ட ஃப்ரெஷ் ஜூஸ் வகைகளை குடியுங்கள்.

அதிகம் எண்ணெய் உள்ள பொருட்கள், பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைச் சாப்பிட்டால் நடைப்பயிற்சி செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...