Monday, May 6, 2013

அகத்திக்கீரையின் மருத்துவப் பயன்கள்


தாவரங்களில் கீரை வகைகள் மிகவும் சத்து மிக்கவை என்பது நாம் அறிந்ததே. அதிலும் அகத்திக்கீரை அதிக சத்துக்களையும், வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. சுவையான இக்கீரை, நம் நாடெங்கும், குறிப்பாகத் தமிழகத்தில் பயிரிடப்படுகிறது.

வெற்றிலைக் கொடிக்காலில் பற்றுத் தாவரமாகவும் இக்கீரையைப் பயிரிடுகிறார்கள். மலேசியாவில் பிறந்தது அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகை செடியாகும். அகத்தியில் பல்வேறு வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்கள் கொண்டது.

கீரையில் உள்ள சத்துக்கள்

முளைக்கீரை : இரும்பு 22.9 மி.கி., கால்ஷியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும். (கீரையைச் சிறிது நேரமே வேகவைக்கவும்)

அகத்திக் கீரை : கால்ஷியம் 1130 மைக்ரோ கிராம், இரும்பு 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5400 மைக்ரோ கிராம் உள்ளன. வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன. ரத்தசோகை, எலும்பு வலுக்குறைவு ஆகிய நோய்கள் வராமல் காக்கும். (மூடப்பட்ட பாத்திரத்தில் வைத்துச் சமைக்கவும்)

பொன்னாங்கண்ணி : இரும்பு 1.63 மி.கி, கால்ஷியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன. இரும்புச் சத்துக் குறைவால் ரத்த சோகை உண்டாகும். கால்ஷியம் குறைவால் பற்களும் எலும்பும்

Sunday, May 5, 2013

பாசிப்பயறு என்ன சத்துக்கள்

கால்சியமும், பாஸ்பரசும் இதில் அதிக அளவு உள்ளது. புரதம், கார்போஹைடிரேட், மற்றும் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் கூடுதலாக உள்ளன.

என்ன பலன்கள்?

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

லால்பேட்டை நகருக்கு வரலாற்று நிகழ்ச்சி வருகிறது….

அஸ்ஸலாமு அலைக்கு(வரஹ்).....

சரித்திரம் படைத்து,சன்மார்க்க கோட்டை என பெயரெடுத்து, ஊரின் விருந்தோம்பலை உலகுக்கு உணர்த்திய ஜாமிஆ மன்பவுல் அன்வார்.தரணி எங்கும் பரவி மார்க்கப் பணியாற்றும் மகத்துவம் மிக்க ஆலிம் பெருமக்களை உருவாகித் தருகின்ற மாபெரும் கல்வி நிறுவனத்தின் 150-வது ஆண்டு விழா இதோ நம்மை எதி நோக்கி வருகின்றது…

பிடி அரிசியும்,வெற்றிலை மகிமை பணமும் நமதூர் ஜாமிஆவின் புகழ் மனம் பரவ வித்திட்டதை எக்காலத்திலும் எவராலும் மறந்து விட முடியாது.பொருளாதாரத்தின் உச்சியில் இல்லாதிருந்த காலத்திலேயே மண்ணின் மைந்தர்கள் மனம் கமழும் மதரஸாவை, தங்களை அர்ப்பணித்து வளர்த்த பெருந்தகைகள் தான் நமது குடும்பத்தின் முன்னோர்களும்,மூதாதையர்களும்!இப்பெரும் பணியில் நம் மக்கள்

Saturday, May 4, 2013

இளநீர் பருகுவோம்




100 கிராம் இளநீரில் 250 மி.கி. பொட்டாசியம் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பொட்டாசியத்துக்கு உள்ளது. நரம்பியல் மண்டலத்தை அமைதிப்படுத்தி, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ரத்தக் குழாய் பாதிப்புகளை பொட்டாசியம் தடுக்கிறது. தினமும் ஓர் இளநீர் குடிப்பதன் மூலம் போதுமான அளவில் பொட்டாசியம் கிடைக்கும். முதியவர்கள் அதிக அளவில் பொட்டாசியம் கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வயது அதிகரிக்கும்போது நம்முடைய சிறுநீரகங்களின் பொட்டாசியத்தைப் பிரித்து வெளியேற்றும் திறன் குறைந்துவிடுகிறது. எனவே, முதியவர்கள் டாக்டரின் ஆலோசனையின் பேரில் பொட்டாசியம் சத்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.

கொத்தமல்லி கொத்தமல்லி என்ன சத்துக்கள்

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

100 கிராம் கொத்தமல்லியிலுள்ள ஊட்டச் சத்து

கலோரி 20
மாப்பொருள் 4 g
- நார்ப்பொருள் 3 g
கொழுப்பு 0.5 g
புரதம் 2 g
உயிர்ச்சத்து ஏ 337 μg 37%
உயிர்ச்சத்து சி 27 mg 45%

என்ன பலன்கள்?

 இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.

நுங்கு என்ன சத்துக்கள்

வைட்டமின் பி, சி சத்துக்கள்
பலன்கள்

கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை.

சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...