Friday, June 27, 2014

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் சுக்கு

இஞ்சி உலர்ந்த பின் அதுவே சுக்கு ஆகும். சுப்பரமணியரை விஞ்சிய தெய்வமும் இல்லை. சுக்குக்கு இணையான மருத்துவமும் இல்லை என்பார்கள். இன்று சுக்கின் மருத்துவ குணமும், பயனும் பற்றி பார்ப்போம்.

சுக்குக்கு தோலில் விஷம் கடுக்காய்க்கு கொட்டையில் விஷம் என்பதை இங்கே நினைவுக்கு கொண்டு வர வேண்டும். பொதுவாக சுக்கின் மீது சுண்ணாம்பை பூசி வெயிலில் வைத்து உலர்த்தி பின் தோலை சுரண்டி நீக்கிவிட்டு உபயோகப்படுத்த வேண்டும்.

உடலில் பித்தம் அதிகரிக்கும் போது குமட்டல், வாந்தி, தலைச் சுற்றல் என்பன போன்ற துன்பங்கள் தோன்றும். அந்நிலையில் சுக்குத் தூளை வெருகடி அளவு (சுட்டுவிரல், நடுவிரல், பெருவிரலைச் சேர்த்து

நினைவாற்றலை பெருக்கும் மாதுளை

மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல.... ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* கடுமையான சீதபேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு... இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் பூண்டு

நம் அன்றாட உணவில் தவறாமல் இடம் பெறுகின்ற ஒரு பொருள் பூண்டு ஆகும். பூண்டும், இஞ்சியும் சேரும் போது பெரும் மணத்தையும், சுவையையும் உணவுக்கு தருகிறது. மேலும் உணவாகின்ற பூண்டு இன்றைய நவநாகரீக உலகில் மானுடத்தை தாக்குகின்ற பல நோய்களுக்கு மருந்தாகி பயனளிக்கிறது.

பூண்டு மத்திய ஆசியாவை பிறப்பிடமாக கொண்டது என்பர். அல்லியம் சேட்டிவம் என்பது இதனது தாவர பெயர். ஆங்கிலத்தில் இதை கார்லிக் என்று அழைப்பர். சித்த, ஆயுர் வேத நூல்களில் பூண்டின் மருத்துவ குணங்களை பற்றி சொல்லுகின்ற போது, பூண்டு உடலை வளர்க்க கூடியது. விந்து வளர்ச்சிக்கு ஏற்றது.

அறிந்ததும்...அறியாததும்

* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.

* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.

* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.

* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.

Thursday, May 29, 2014

ரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும் கிராம்பு

ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.

எலும்புகளை பலப்படுத்தும் கொய்யா

கொய்யாவின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கொய்யா, அதிக சத்துகளைக் கொண்டதாகத் திகழ்கிறது. கொய்யா கோடைக் காலத்தில்தான் அதிகமாக விளையும். தற்போது உயிரித் தொழில்நுட்ப முறையில் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

கொய்யாவில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, நெல்லிக்கு அடுத்து அதிக வைட்டமின் 'சி' சத்து உள்ள பழம் கொய்யாதான். கொய்யாவின் பிற மருத்துவ குணங்கள்...

நோயின் ஆரம்பமே மலச்சிக்கல் தான். அனைத்து நோய்களின் தாக்கமும்

கோடைக்கு ஏற்ற பாசிப்பயறு

பயறு வகை உணவான பாசிப்பயறு பல்வேறு சத்துகளின் பெட்டகமாக உள்ளது. பண்டைய காலம் முதலே பாசிப்பயறு இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா போன்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த நூற்றாண்டு களில்தான் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளன. புரதம், கார்போஹைட்ரேட்டுடன், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...