Thursday, January 2, 2014

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு!

குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் கீழ்க்கண்ட முறைப்படி உணவு அளிக்கலாம்:

* குழந்தைகளுக்கு இட்லி, தோசை, பால் குறைவான மில்க்ஷேக், சப்பாத்தி, சாண்ட்விச், தானிய சுண்டல், முட்டை, பருப்புசாதம், கலவைசாதம், பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

* நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாக குழந்தைகளுக்குக் காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள்.

* புரதம் செறிந்த இறைச்சி, பருப்பு வகைகள், முட்டை போன்றவற்றை சரியான அளவில் கொடுக்கலாம்.

* குழந்தைகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத்தானிய பிரெட் போன்றவற்றை சாப்பிடக் கொடுங்கள்.

* எண்ணெயில் பொரித்த உணவுகளை விட சுட்ட, வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லது.

* கடைகளில் வாங்கும் உணவுகள், துரித உணவுகளை கூடிய மட்டும் தவிர்த்து விடுங்கள்.

* இனிப்புச் சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களை கொடுக்காதீர்கள். அதற்குப் பதிலாக பாலையும், தண்ணீரையும் கொடுங்கள்.

* இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.

* நிறைய வண்ணமயமான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர் திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு இரும்புச் சத்து, புரதச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம்.

இதைத்தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தைகளுக்குத் தேவையான சத்துகளும் (இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை), அளவுகளும் மாறும். அதற்கேற்ப கவனித்து உணவளியுங்கள்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...