Tuesday, December 11, 2012

உணரப்படாத தீமை! பொய்



பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை.பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு பொய் மனித குலத்தால் கடைபிடிக்கப்படுகின்றது. இŠலாமும் மற்றைய எல்லா மதங்களும் பொய்ப் பேசுவது தவறு என்று அறிவுரை வழங்கிய போதும் பேசப்பழகிய குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் வயோதிகர் வரை பொய் பேசுகிறார்கள். வாய்மை பேசுபவரைக் கண்டால் இவருக்கு என்ன பெரிய †ரிச்சந்திரன் என்ற நினைப்போ என்று ஏளனம் செய்யும் அளவிற்கு மனித சமூகம் சென்றுவிட்டது. இந்த தீமைக்கு இŠலாத்தை கொள்கையாகக் கொண்ட முŠலிம்களும் விதி விலக்கல்ல. இŠலாம் பொய் பேசுபவர்களுக்கு செய்யும் எச்சரிக்கையும் உண்மை பேசுவதற்கு மனித குலத்திற்கு செய்யும் அறிவுரையும் கீழே காண்போம்:

நீங்கள் அல்லா‹வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119) அன்றைய தினம் பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)

நீங்கள் உண்மையைக் கடைபிடியுங்கள் ஏனெனில் உண்மையானது நன்மையின் பக்கம் இட்டுச் செல்கிறது. நன்மையோ சுவர்க்கத்தின்பால் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது. ஒருவர் உண்மை பேசிக்கொண்டும், உண்மைக்காகப் பெரும் முயற்சி செய்துகொண்டும் இருப்பார். அதன்பயனாக அல்லா‹விடம் …ித்தீக் சிறந்த வாய்மையாளர் என்று பதிவு செய்யப்பட்டுவிடுகிறார். மேலும் உங்களுக்கு பொய்யை எச்சரிக்கிறேன். ஏனெனில் பொய்யானது பாவத்தின் பக்கம் இட்டுச் செல்கிறது: பாவமோ நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லக்கூடியதாயிருக்கிறது. ஒருவன் பொய் பேசிக்கொண்டும் அதற்காக பிரயத்தனை செய்து கொண்டுமிருந்து இறுதியாக அல்லா‹விடம் பொய்யன் என்பதாக பதிவு செய்யப்பட்டு விடுவான் என்று நபி(…ல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மŠவூத்(ரழி) பு†ாரி,முŠலிம்)

பொய் பேசுவது நயவஞ்சகனின் குணம்:

: யாரிடம் நான்கு குணங்கள் உள்ளதோ அவன் ஒரு முழு நயவஞ்சகன் அவைகளாவன: கொடுத்த வாக்குறுதியை மீறுவான்: அமானிதத்தை மோசம் செய்வான்: பேசினால் பொய்யே பேசுவான்: சண்டையிடும் போது இழிமொழியில் வசைமாறி பொழிவான் என்று நபி(…ல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அப்துல்லா‹பின் அம்ரு(ரழி)பு†ாரி,முŠலிம்)

மூவர் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டார்கள்:

மூவரிடம் கியாமத் நாளையில் அல்லா‹ பேசமாட்டான் அவர்களின் பக்கம் கிருபையோடு பார்க்கவும் மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று நபி(…ல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்(ரழி) அவர்கள் (அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று கூறிவிட்டு,அல்லா‹வின் தூதரே! அவர்கள் யாவர்? என்று கேட்டார்கள். 1 ,இடுப்பில் அணியும் வே‰டி, கால்சட்டை முதலியவற்றை பெருமை என்ற அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து கொண்டிருப்பவர். 2, தாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவர், 3, பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று கூறினார்கள். (அபூதர்(ரழி), முŠலிம்)

ஆக முŠலிம் சமுதாயம் வாய்மைமிக்க சமுதாயமாக விளங்க வேண்டும் என்று அல்லா‹வாலும் அவன் அனுப்பிய தூதர் மு†ம்மது நபி (…ல்) அவர்களாலும் விரும்பப்படுகின்றது. ஆனால் இன்று வாய்மை எல்லா துறைகளிலும் புறக்கணிக்கப்படுகின்றது. அது வியாபாரம், அலுவலகம்,ஆட்சி அதிகாரத்திலும் மட்டுமல்லாமல் மார்க்கத்துறையிலும் புறக்கணிக்கப்படுகின்றது.

இறைவன் பெயரால் பொய்:

(யூதர்கள்) மனிதர்களில் சிலர் அற்பக் கிரயத்தைப் பெருவதற்காக வேண்டி தங்கள் கரங்களால் நூலை எழுதி வைத்துக்கொண்டு பின்னர் இது அல்லா‹விடமிருந்து வந்ததுதான் (2:79) என்று இறைவன் பெயரால் பொய் கூறுகிறார்கள். (கிறிŠதவர்கள்) மர்யமுடைய மகனாகிய ம…ீ‹தான் அல்லா‹ என்று கூறுபவர்களும்நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.(5:72)

நிச்சயமாக அல்லா‹ மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்களும் காபிர்களே(5:73)

இŠலாத்தின் பெயரால் பொய்:

இறைமறைப் பற்றி பொய் சொல்வது குர்ஆனில் இல்லாத கருத்துக்கள் இருப்பதாக சொல்வது, (சமாதிச் சடங்கு சூஃபியி…ம், தக்லீது), இறை வசனத்தை மறைத்துக் கூறுவது திரித்துக் கூறுவது ஆயத்தைப் புரட்டுவது குழப்புவது உள் அர்த்தம் வெளி அர்த்தம் என்று சொல்வது †லாலை †ராமாக்குவது †ராமை †லாலாக்குவது, அல்லா‹ அறிந்ததை தாங்களும் அறிந்தவர்கள் அறிஞர்கள் என்றெல்லாம் தன் வாயில் வந்ததை மறுமையைப் பற்றிய அச்சமின்றி நாகூசாமல் பொய் சொல்வது. †தீ…ில் குழப்பம் உள்ளது ஆகவே இமாம்களை ஆலிம்களைத் தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று பொய் சொல்வது.

மு†த்தி…ீன்“கள் (நபிமொழி விற்பன்னர்கள்) அன்றே தரம் பிரித்து சொல்லிவிட்டார்கள். இது ஆதரப்பூர்வமானது …†ீ‹, இட்டுக்கட்டப்பட்டது மவ்ழுவு, இது பலகீனமானது லயீஃப் என்று ஆக பின்பற்றத்தக்கது …†ீ‹ மற்றவை ஆதாரமற்றவை பின்பற்றக்கூடாது. இப்படி தெளிவாக இருந்தும் இட்டுக்கட்டப்பட்ட பல†ீனமானவைகளை அறிந்து கொண்டே மக்களிடம் †தீŠ என்று சொன்னால் அதுவும் பொய்தான்.

அல்லா‹ அனுமதிக்காததை மார்க்கமாகி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்(மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு (அல்குர்ஆன்)

எவன் என்மீது அறிந்து கொண்டே பொய் சொல்கிறானோ அவன் இருக்குமிடம் நரகமாகட்டும் என்று நபி(…ல்) அவர்கள் கூறினார்கள். (அபூ†ுரைரா(ரழி) முŠலிம்)

இது பெரும்பாலும் எல்லா †தீŠ நூல்களிலும் காணப்படும் முதவாத்திரான (அதிக நபித்தோழர்களால் அறிவிக்கப்பட்டது) †தீ…ாகும். இŠலாமிய அறிஞன் மீது பொய் பேசுவது , ஒரு பெண்ணின் கற்பின் மீது, குறிப்பிட்ட இŠலாமிய அழைப்பாளர்கள் மீது ,அந்த ƒமாத்தார்கள் மீது இல்லாததை இட்டுகட்டி, இவர்கள் …லவாத் சொல்லமாட்டார்கள் என்றும் பொய் சொல்வது, இவர்கள் பெருமானாரை …†ாபாக்களை இமாம்களை மதிக்க மாட்டார்கள் என்றெல்லாம் இட்டுகட்டி சொல்வது இவையும் பொய்தான்.

வியாபாரத்தில் பொய்:

ஒருவர் உணவுப் பொருள் விற்றுக் கொண்டிருக்கும்போது நபி(…ல்) அவர்கள் அவரிடம் சென்று நீர் எப்படி விற்கிறீர் என்று கேட்க அதற்கு அவர்(சரியாக) விற்கிறேன் என்று பதில் கூறினார்.அப்போது அவர் உணவுப் பொருளுக்குள் கையை ஓட்டிப் பார்க்கும்படி நபி(…ல்) அவர்களுக்கு வ†ீ மூலம் அறிவிக்கப்பட்டது. உடனே தமது கையை அதில் ஓட்டிப்பார்த்தபோது , உள்ளே ஈரமாக இருந்தது. அப்போது நபி(…ல்) அவர்கள் பிறருக்கு மோசடி செய்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என்றார்கள். (அபூ†ுரைரா(ரழி) அபூதாவூத்)

நாம் நினைப்பது போல் இல்லாமல் உண்மை பேசினால் வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும் என்பது நபி(…ல்) அவர்களின் அன்றைய காலத்தில் மட்டுமல்லாமல் இன்றைய நவீன காலத்திலும் நாம் காணும் உண்மை நிலை. இன்ன கம்பெனியின் ƒப்பான் நாட்டின் தயாரிப்பு என்றால் விலையைப் பற்றி கவலைப் படாமல் வாங்கக்கூடிய மக்கள் ஏராளம் .அத்தகைய கம்பெனிகள் பல ஆண்டுகளுக்கு செழித்து வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் வாங்கும் பொருட்களில் ஏமாற்றியவனை அடப்பாவி ஏமாற்றி விட்டானே 1 ரூபாய் 2 ரூபாய் கூட கேட்டிருந்தாலாவது கொடுத்திருப்பேனே! இப்படி தரம் கெட்ட பொருளை பொய் சொல்லி நம் தலையில் கட்டி விட்டானே இவன் ஒரு முŠலிமா? என்று வருந்தும் நாம் மற்றவர்களை ஏமாற்றலாமா?

நபி(…ல்) அவர்கள் கூறுகிறார்கள்: தான் விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவன் உண்மையுள்ள விசுவாசியாக ஆகமுடியாது.(அனŠ (ரழி) பு†ாரி,முŠலிம்)

நீதியை நிலை நாட்ட வேண்டிய வக்கீல்களே பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. வக்கீல் தொழில் இப்படி பல்வேறு வகையான பொய்கள் வியாபாரத்திலும் சொல்லப்டுகின்றது. உத்தியோகத்தில் பொய், அது மட்டுமல்ல அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்கள் எழுத்தர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள், வக்கீல்கள் பெரும்பாலோர் பொய் சொல்கிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போனால் எல்லோரும் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு நியாயத்தை சொல்லத்தான் செய்கிறார்கள். பொய் பேசினால் தான் எங்கள் தொழில் நடக்கும். ஆகவே நாங்கள் என்ன செய்வது என்று ஒரு முŠலிம் வக்கீல் சொன்னால் அது கோழைத்தனத்தின் அடையாளம்.

ஆக இது போன்ற எஞ்சினியர்கள் கொடுத்த காண்ட்ராக்ட்டில் தரமில்லாத பொருட்களினாலும் ஏமாற்று வேலைகளை செய்து அதை சரிகட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் லஞ்சம் கொடுத்து பொய் சொல்லி சம்பாதிக்கிறார்கள். புகழ்வதில் பொய்: கஞ்சனை பிரபு என்றும் சில்லரை தர்மம் செய்தவனை சீதக்காதி என்றும் கோழையை வீரன் என்றெல்லாம் புகழ்வது. ஆட்சியில் உள்ளவர்களை புகழ்வதைப்பற்றி சொல்லத் தேவையில்லை. மாண்பில்லாத மானமில்லாத அரசியல் வாதிகளை மாண்புமிகு மானமிகு என்று அடைமொழி இட்டு அழைக்காதவர்கள் இல்லை. இதுதான் அவர்களை புகழ்வதில் மிகவும் சாதாரண தரம்.

பணக்காரர்களை புகழ்வதிலும் எல்லை இல்லை. பணக்காரர்கள் அவர்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் ஏழைகளுக்கு உதவ அவர்களை அவர்கள் முன்னிலையிலேயே உங்களை விட்டால் இப்படிப்பட்ட உதவி செய்ய உலகில்யாரும் இலர் நீங்கள் தான் இறை இல்லக் கொடை வள்ளல் என்றெல்லாம் நல்ல காரியம் செய்பவர்களை அளவுக்கதிகமாக புகழ்வதால் அவர்களையும் அறியாமல் அவர்களிடம் ஆணவம் வந்துவிட நாம்தான் காரணமாகி விடுகின்றோம். அதனால்தான் நபி (…ல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு …†ாபி இன்னொரு …†ாபியை புகழ்வதைப் பார்த்த நபி (…ல்) அவர்கள் நீர் உம்முடைய சகோதரரின் தலையைக் கொய்துவிட்டீர் என்றார்கள். நேரடியாக அளவுக்கதிகமாக புகழ்வது அவனை கொலை செய்வதற்கு சமம்.(அபூபக்ரா பு†ாரி,முŠலிம்)

மேலும் யாராவது உங்களை புகழ்ந்தால் அவன் முகத்தில் மண்ணை அள்ளி வீசுங்கள் என்றார்கள் நபி(…ல்) அவர்கள்.(மிக்காத்பின் அŠவத்-முŠலிம்)

ஆக தவரான புகழ்ச்சி மனிதனை அழித்துவிடும். புகழும்போது நிதானம் தேவை உள்ளதைச் சொல்ல வேண்டும். அந்த மனிதரையும் அவருக்கு இந்த நல்ல மனதை தந்த இறைவனையும் புகழ்வதுதான் நபிவழியாகும்.

சாட்சி சொல்வதிலும் பொய்:

ஈமான் கொண்டவர்களே நீதியை நிலை நிருத்துவதில் இறைவனுக்கு உறுதியான சாட்சியாக இருங்கள்- அது உங்களுக்கோ பெற்றோருக்கோ உறவினர்கோ பிடித்தவர்களுக்கோ எதிராக இருந்தாலும் சரியே.(4:135)

மக்ƒீமிய்யாவெனும் குடும்பத்தைச் சார்ந்த பெண் ஒருவள் திருடி விட்ட வி„யம் ச†ாபாக்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது .இது வி„யமாக நபி(…ல்) அவர்களிடம் பரிந்துரைப்பது யார் என்பதை பேசிக் கொண்டிருந்தனர். உ…ாமத்து பின் &ை#402;த்(ரழி) அவர்களே இது வகையில் துனிந்து நபி(…ல்) அவர்களிடம் சென்று பரிந்துரைத்தார்கள். அப்போது நபி(…ல்) அவர்கள் அல்லா‹வின் சட்டத்தை நிறைவேற்றும் வி„யத்தில் பறிந்துரைக்கிறீர் என்று கூறி எழுந்து நின்று பிரசங்கம் செய்தவர்களாக உங்களுக்கு முன் உள்ளோர் நாசமாக்கப்பட்டதிற்கு காரணமே அவர்களில் செல்வாக்குள்ளவன் திருடிவிட்டால் அவனை விட்டு விடுவார்கள். அவர்களில் இயலாதவன் திருடிவிட்டால் உடனே அவனைத் தண்டித்து விடுவார்கள் என்று கூறி விட்டு அல்லா‹வின் மீது ஆணையாக மு†ம்மதுடைய மகள் பாத்திமா திருடிவிட்டால் அவளது கையையும் துண்டித்துவிடுவேன் என்றார்கள். (ஆயி„ா(ரழி) பு†ாரி,முŠலிம்)

ஆனால் இன்று நாமோ எந்த வி„யத்திலும் அட இவன் நம்ம ஊர்க்காரன் ƒாதிக்காரன் நம்ம பகுதிக்காரன் நம்ம இனத்தான் சொந்தக்காரன் நம்ம கொள்கைக்காரன் கூட்டம் என்றெல்லாம் நீதிக்கு புறம்பாக நடக்கிறார்கள். ஆனால் இறைவனோ ஏழை பணக்காரன் என்றோ சொந்தம் பந்தம் என்றோ பார்ப்பதில்லை. நல்லவன் தீயவன் என்ற பாகுபாட்டைத்தான் பார்க்கிறான். அதைத்தான் திருமறையில் உங்களில் தக்வா (பயபக்தி) உடையவர்கள் தாம் இறைவனிடம் உயர்வானவர்கள்.(50:13)

மேலும் இறைவன் கூறுகிறான். நீங்கள் ஊண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.(2:42) ஒரு வி„யத்தில் ஒருவருடைய சாட்சி தேவை ஆனால் அவரோ நமக்கேன் வம்பு என்று மெª‘னமாக இருப்பதோ அல்லது நமக்கு வேண்டப்பட்டவராயிற்றே அவருக்கு எதிராக சொல்ல வேண்டிவரும் என்பதால் மெªனமாக இருப்பதும் பொய் தான். பொய்யான சாட்சியைப் போன்று உண்மை சாட்சியை மறைப்பதும் தவறுதான். ஏனெனில் நிரபராதி தண்டிக்கப்பட்டு குற்றவாளி விடுதலை ஆக்கப்படுவதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம்.அது போன்றே நமக்கு பிடிக்காதவர்களுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்வது அநீதி .ஆக ஒரு முŠலிம் எந்த ஒரு முŠலிம் எந்தவொரு வி„யத்திலும் உண்மையைத்தான் உரைக்கவேண்டும் நீதிக்குத்தான் துணை போக வேண்டும். முŠலிமிடம் எல்லா வி„யங்களுக்கும் இŠலாம் வாய்மையைத்தான் எதிர்ப்பார்க்கிறது. இŠலாம் தமா…ூக்காக கேலிக்கைகாக பொய் சொல்வதைக்கூட அனுமதிக்க வில்லை.

அடுத்தவனை மகிழ்விப்பற்காக பொய் சொல்பவன் அழிந்து போகட்டும் என்றார்கள் நபி(…ல்)அவர்கள். (பˆ†ன்பின் †கீம், திர்மிதீ,அபூதாவூத்,அ‹மத்)

குழந்தைகளிடம் கூட பொய் சொல்லக்கூடாது:

ஒரு நாள் நபி(…ல்) அவர்கள் ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார்கள். அந்த வீட்டு அம்மையார் வெளியில் உள்ள தனது குழந்தையை வா உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்பொழுது நபி (…ல்) அவர்கள் அவரிடம் உமது குழந்தைக்கு என்ன கொடுக்கப் போகின்றீர் என்று வினவ, அவர் பேரித்தம் பழம் கொடுக்கப் போகிறேன் என்றார். அதற்கு நபி(…ல்) அவர்கள் அப்படி செய்யாவிட்டால் உம்மீது ஒரு பொய் பதிவு செய்யப்படும் என்றார்கள். (அப்துல்லா‹ பின் ஆமிர்(ரழி) அபூதாவூத், பை†கீ)

சம்பிரதாயத்திற்காக பொய் சொல்வதும், சம்பிரதாயத்திற்காக ஒருவரை விருந்துக்கு அழைப்பதும் , சம்பிரதாயத்திற்காக அழைக்கப்பட்டவர் மறுப்பதும் பொய் தான். இத்தகைய பொய்யையே இŠலாம் அனுமதிக்கவில்லையென்றால் வியாபாராத்திலும் உத்தியோகத்திலும் இன்ன பிற கொடுக்கல் வாங்கலிலும் பொய் சொல்வதின் நிலை என்ன என்பதை முŠலிமாகிய நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு முறை நபி(…ல்) அவர்களுக்கு பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் எங்களிடம் சாப்பிடுமபடி கூறினார்கள்.அதற்கு நாங்கள் எங்களுக்கு விருப்பமில்லை என்றோம்.அதற்கு அவர்கள் நீங்கள் பசியையும், பொய்யையும் சேர்த்துக் கூறாதீர்கள் என்றார்கள். (அŠமா பின்து யƒீத்(ரழி) இப்னு மாˆƒா)

பொய் நிச்சயம் நிலைக்காது: இறைவன் கூருகிறான், சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81) ஆகவே பொய் தற்காலிக வெற்றிதானே தவிர நிரந்தர வெற்றியல்ல. இதனால் சமுதாயத்தில் பித்அத்துக்கள்(மார்க்கதில் புதுமை),குழப்பங்கள் அமைதியின்மை அவதூறுகள் உறவு கேடுகள் எல்லாம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய படுபாதக விளைவுகளை ஏற்படுத்தும் பொய்யை நாம் விட்டு விட வேண்டும் என்று நபி (…ல்) அவர்கள் கூறினார்கள். எவன் பாவம் செய்துகொண்டே இருக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஒரு கரும் புள்ளி விழுகிறது. நாளவட்டத்தில் அவன் உள்ளம் முழுவதுமே இருளாகி கருப்பாகி விடுகின்றது.(அபூ†ுரைரா(ரழி) திர்மிதீ) இத்தகைய பொய்யிலிருந்து நம்மையும் உற்றார் உறவினர் சமூகத்தையும் காப்பாற்ற இறைவன் அருள் புரிவானாக.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...