Thursday, November 14, 2013

உடம்பை குறைக்கணுமா?

அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது. 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?' என்று திணறித் தவித்துப் போகிறார்கள். அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை...

* அன்றாடம் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடல் பருமனை அதிரடியாகக் குறைக்கிறேன் பேர்வழி என்று கொலைப்பட்டினி கிடைக்கக்கூடாது.

* நொறுக்குத் தீனிகளைத் தள்ளி வைக்க வேண்டும். 'இன்று மட்டும் சாப்பிடுகிறேன்' என்று நினைத்தால், என்றுமே அவற்றுக்கு விடைகொடுக்க முடியாது.

ரத்த அழுத்தத்தில் இருந்து காக்கும் கேரட், பப்பாளி!

உலக மக்களை அச்சுறுத்தும் பிரச்சினையாக தற்போது உயர் ரத்த அழுத்தம் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், பசலைக்கீரை, பரங்கிக்காய், கேரட் போன்ற காய்கறிகள் மூலமும், வாழை, பப்பாளி போன்ற பழங்கள் மூலமும் மக்கள் தங்களை ரத்த அழுத்தத்தில் இருந்து காத்துக்கொள்ள முடியும் என்கிறது, உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ).

இந்நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி, உலகெங்கும் ஆண்டுதோறும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தத்தால் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க, வயது வந்தோர் தினமும் 5 கிராமுக்குக் குறைவாக உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது தினசரி 3 கிராம் பொட்டாசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்

மஞ்சள் உலகின் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல் வாதம்) சிகிச்சையில் பயன்ப டுத்தப்படுகிறது.

ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை. மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கலாம்.

அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது,

குழந்தைகளின் தூக்கம் வித்தியாசமானது

* குழந்தைகளின் தூக்கம் வித்தியாசமானது. குழந்தைகளின் தூக்கத்தை கட்டுப்படுத்துவது மூளையின் ஹைப்போதலாமஸ் என்ற பகுதி. இது தூக்கத்தை மட்டுமின்றி உணவு, சுபாவம், இதயம், சருமம், கிட்னி, ஹார்மோன் செயல்பாடு போன்றவைகளையும் ஆளுமை செய்கிறது. அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் மேற்கண்ட உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கும்.

* பெரியவர்கள் ஒரு இரவு தூங்காவிட்டால், மறுநாள் காலையில் தூங்கி அதை ஈடுசெய்துகொள்வார்கள். குழந்தைகளால் அது முடியாது என்பதால், தூக்கமின்மை குழந்தைகளை வெகுவாக பாதிக்கும்.

* இரண்டு மாதம் வரை குழந்தைகள் 10 முதல் 19 மணிநேரம் தூங்கும். மூன்றில் இருந்து 12 மாதம் வரை 13 மணி நேரம் வரை தூங்கும். ஒரு வயது முதல் மூன்று வயது வரையும் கிட்டத்தட்ட அதே காலஅளவில்

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...