Tuesday, April 21, 2015

உடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்

புரதம் மனிதனுக்குத் தேவையான முக்கிய உணவு. இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியம். செரிமானத்தின் போது வயிற்றில் புரதம் சிறு துகள்களாக உடைக்கப்படுகின்றது. புரதத்திலிருக்கும் அமினோ அமிலங்கள் உடலுக்கு சத்துணவாகின்றன.

இந்த அமினோ அமிலங்கள் பல பிரிவு உண்டு. சில புரத உணவுகளில் பெரும்பாலும் அனைத்தும் கிடைத்து விடும். அசைவ உணவு, பால் பொருட்கள், மீன், முட்டை இவை ஒரு பிரிவு. தாவர வகையில் முழு தானியங்கள், பருப்புகள், கொட்டை என பிரிவுகள் உண்டு. உடலில் நீருக்குப் பிறகு அதிகம் இருப்பது புரத சத்துதான்.

ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும் கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும். கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.

கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும். கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்

ஆஸ்துமா எனப்படும் நீண்ட கால நுரையீரல் பாதிப்பு நுரையீரலில் உள்ள காற்றுக் குழாய்களை குறுக்கி விடுகின்றது. இது அடிக்கடி ‘வீஸிங்’ எனப்படும் சத்தமான மூச்சு (விசில் சத்தம் போல), மூச்சுத் தவிப்பு, நெஞ்சிருக்கம், இருமல் போன்ற வெளிப்பாடுகளை ஏற்படுத்துகின்றது. இருமல், இரவிலும், விடியற்காலையிலும் ஏற்படும்.

ஆஸ்துமா எந்த வயதினரையும் பாதிக்கும் என்றாலும், குழந்தை பருவத்திலேயே அநேகமாக ஆரம்பித்து விடுகின்றது. ஆஸ்துமாவை அறிந்துக்கொள்ள முதலில் நாம் மூச்சுக் குழாய்களைப் பற்றியும்,

நடைப்பயிற்சி முடித்தவுடன் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

உடலில் உள்ள கலோரிகள் நடைப்பயிற்சி செய்யும்போது கரையும். இதனால்தான் பசியெடுக்கிறது. இந்த நேரத்தில் அதிகமான கலோரி கொண்ட உணவை சாப்பிட்டால் நிச்சயம் எடை அதிகரிக்கும். சராசரி எடை, உயரம் உள்ள ஒருவருக்கு தினம் 2,400 கலோரி போதுமானது. இதை மனதில் கொண்டு சாப்பிடுங்கள்.

வாக்கிங் முடிந்து வரும்போது ஜூஸ், மோர் போன்றவற்றை அருந்தலாம். அதிகம் சர்க்கரை சேர்த்த ஜூஸ், திக்காக இருக்கும் தயிர் போன்றவற்றை

கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர்

கோடை வெயிலுக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், மோர், தயிருக்கு இணையாகாது. இதில், தயிரை ரொம்ப ஜில்லென்றும்

சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.

கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது எனஆயுர்வேதத்தில் ஒரு பட்டியலே சொல்லப்படுகிறது. தயிரோடு ஒப்பிடும்போது மோர் மிகவும் சிறந்தது. வெறுமனே தயிரில் தண்ணீர்
ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரி பங்கு தண்ணீரைச்
சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

வெயில் காலத்தில் குழந்தைகளில் பாதுகாப்பு

பெற்றோர், குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். தகுந்த காலங்களில் தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு ஆளாகின்றனர். வெயில் காலங்களில், ஈரத்தன்மையுள்ள பொருட்களில், கிருமிகள் மிக வேகமாக வளரும் என்பதால், பழம், காய்கறி நறுக்கிய கத்திகள், சமைக்கும் பாத்திரங்களை, ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், குழந்தைகளை வெளியில் விளையாடுவதை தடுத்து, கேரம், செஸ், போன்ற

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உடனடியாக செய்ய வேண்டியது

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து

வெயில் காலத்தில் தினம் ஒரு கீரையை உணவில் சேருங்க

உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம்.

ரத்தசோகை பிரச்சனைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரைதான். கீரைகளை வாங்கும் போது கீரைகள் ஃப்ரெஷ்ஷாக இருப்பதை பார்த்து வாங்க வேண்டும். கீரைகள் வாடி வதங்கி இருக்கக் கூடாது. பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்த்தி விடுவது நல்லது.

கீரையை உபயோகப்படுத்தும் முறைகள் :

• கீரைகளை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும். பூச்சிகள்,

அன்னாசிப்பழம் பயன்பாடுகள்

எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது.

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல்

தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

சிலர் சாப்பிடும் காய்கறிகளை தோலுரித்துவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால் சிலரோ காய்கறிகளை தோலுடன் சாப்பிட்டால் தான் நல்லது என்று சொல்வார்கள். ஏனெனில் காய்கறிகளின் தோல்களில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது.

குறிப்பாக ஒருசில காய்கறிகளின் தோல்களில் நார்ச்சத்துக்களும், இதர ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. அதற்காக தோல் கசப்பாக இருந்தால், அதனை சாப்பிடக்கூடாது. அப்போது அந்த தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். முக்கியமாக இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு செழிப்பாக விளைய வைத்த ஆர்கானிக் காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்கி சாப்பிட வேண்டும்.

• கேரட்டின் தோலில் பீட்டா கரோட்டீன் மற்றும் பீனோலிக் போன்ற

தூக்கம் வருவதற்கு சப்போட்டா பழம்

இனிப்பு சுவை அதிகமுள்ள சப்போட்டா பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் நிறைந்துள்ள சப்போட்டா பழம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இந்த பழத்தில் நார் சத்து உள்ளதால் செரிமானத்துக்கு உதவுகிறது. புரோட்டின், இரும்பு சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது.

கண்பார்வையை அதிகரிக்கும். தோல் பாதிப்படையாமல் பாதுகாக்கும் சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள் இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நலன் பயக்கும்.

சுட்டெரிக்கும் வெயில் காலத்தினை சமாளிக்க டிப்ஸ்


கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் அதாவது இந்த வாரத்தில்தான் தொடங்கும். மே மாதம் வெயில் அளவு உச்சக்கட்டத்தில் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த மாதமே வெயில் தன் உக்கிரத்தைக் காட்டத் தொடங்கி விட்டது. தற்போது கத்திரி வெயில் காலம் போல வெயில் வாட்டி வதைக்கிறது.

வெயில் உக்கிரமாகி வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. 'சுள்'ளென்று அடிக்கும் வெயில் மண்டையை பிளந்து விடும் போல உள்ளது. அனல் காற்று உடம்பு முழுவதும் பரவி 'தகதக'வென எரிய வைக்கிறது. இதனால் சாதாரணமாக வெளியில் சென்று வந்தாலே

தினமும் ஒரு வேளை முளைதானிய உணவை சாப்பிடுங்க

இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 – 10 மணிக்குள்

உயிரை குடிக்கும் சிகரெட் உயிரை குடிக்கும் சிகரெட்

ஒரு 'தம்' போட்டாத்தான் வேலை ஓடும். ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... இதோ வந்து விடுகிறேன் என்று பெரிய பெரிய அதிகாரிகள் வரை அவ்வப்போது எழுந்து சென்று வருவதை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். சிகரெட்டை பற்ற வைத்து... இழுத்து.... வாய்க்குள் சூழும் புகையை சுருள் சுருளாய் வெளியே ஊதி விடும்போது அதென்னவோ இதயமே இலகுவாகி விட்டது போன்ற ஒரு மிரமை ஏற்படுகிறது.

மெத்த படித்தவர்களை கூட மொத்தமாய் கட்டி போட்டு இருக்கும் மோக பேய்கள்தான் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள்.

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் புதிய தகவல்

மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப்–2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்நோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப்–2 நீரிழிவு நோய்

பழுப்பு அரிசியே ஆரோக்கியத்திற்கு நல்லது

வெள்ளையனை மட்டுமல்ல வெள்ளை அரிசியையும் வேண்டாம் எனச் சொன்னவர் மகாத்மா காந்தி. ‘பழுப்பரிசியே நல்லது‘ என 70 வருடங்களுக்கு முன்பே அவர் வலியுறுத்தினார். உணவுப்பற்றாக்குறை குறித்த பெரும் விவாதங்கள் நடைபெற்று வந்த காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் ஆலையில் அரைத்த, குருணை அற்ற, வெளுத்த அரிசியை மட்டும் விநியோகிக்கச் சொல்கின்றர்.

ஏறத்தாழ 10 சதவிகிதம் அரிசி வீணாகிறது என்று நெல் விவசாயிகள் வருந்திச் சொல்கின்றனர். எனவே பழுப்பு கைக்குத்தல் அரிசிதான் நல்லது. அதைச் சாப்பிடுங்கள் என்று கூறினார். பழுப்பரிசி எனும் பிரவுன்

இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்

• தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேங்காய் எண்ணெய் 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலம் (Fatty acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. தினமும் 2 முதல் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது.

• காபி : காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்காவிட்டால் பலருக்கு அன்றைய பொழுதே தொடங்காது. காபியில் உள்ள ‘கேஃபஸ்டால்’ (Cafestol), கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய

சர்க்கரை நோயாளிகளின் உன்னதமான உணவு வெள்ளரிக்காய்

வெள்ளரியில் அதிக அளவிலான விட்டமின் கே சத்து அடங்கியிருக்கின்றது. இது எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவுகின்றது. விட்டமின் கே அல்ஸைமர் என்னும் மறதி நோய் வராத வண்ணம் மூளை நரம்புகளுக்கு ஊட்டசத்தாகவும் விளங்குகின்றது.

* 100 கிராம் வெள்ளரியில் 96 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து அடங்கியுள்ளது. சாதாரண நீரை விட பல்வேறு ஊட்டசத்துக்களை இது உள்ளடக்கி இருப்பதால் கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தையும், வியர்வையால் ஏற்படும் சோர்வையும், வெயிலின் கொடுந்தாக்கத்தால் ஏற்படும் மூளை வறட்சி அதனால் உண்டாகும் மயக்க நிலை இவற்றினின்று விடுதலை தரும் வகையில் விரட்டியடிக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறது.

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்

* வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது.

* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

* 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகள்

உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம். அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ...

மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...