Tuesday, March 31, 2015

உடல் நலத்துக்கு தேவை கார்போஹைடிரேட்

‘டயட்டிங்’ என்ற பெயரில் அடியோடு கார்போஹைடிரேட் உணவை தவிர்ப்பவர்களுக்காகவும், கார்போஹைடிரேட் உணவை எப்படி,

எதற்காக, ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கவும் நமது டாக்டர் கமலிஸ்ரீபால் இந்த கட்டுரையை உங்களுக்காக

வழங்குகிறார்.

எப்பொழுதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பது தவறு.

அதேபோல் ஒரேடியாக உணவை, குறிப்பாக கார்போஹைடிரேட்

சாப்பிட்டு முடித்ததும் சூடாக தண்ணீர் அருந்தலாமா?

சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில்

காபி குடிப்பது உடலுக்கு நல்லதா?

காபி நமது அன்றாடப் பானங்களில் ஒன்று. பொதுவாக பல்வேறு வேதிப்பொருட்கள் கலந்ததே காபி. அவற்றில், 'காபின்' என்ற குறிப்பிட்ட வேதிப்பொருள்தான் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதேசமயம், நம் மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, புத்துணர்வு அடையவும் செய்கிறது.

காபியில் உள்ள சில வேதிப்பொருட்கள் 'பார்கின்சன்' நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. இன்சுலின் சுரக்கச் செய்வதால், காபி குடிக்கும் பழக்கம், இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கலாம். தினமும் 2 கப் காபி குடிப்பவர்கள் 14

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு

பிரேக் பாஸ்ட்’ என்பதன் பொருள் இரவு முழுவதும் சுமார் 10 மணி நேரம் உண்ணாமல் இருப்பதை உணவு உட்கொண்டு முடிப்பதாகும். இன்றைய நாகரீக அவசர உலகில் பலர் காலை உணவை தவிர்த்தே விடுகின்றனர்.

அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை அறிந்து, அனைவரும் இனி காலை உணவை கண்டிப்பாக உண்ண வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பண்டைய காலங்களில் காலை உணவு என்பது இடத்திற்கு ஏற்றார் போல் மாறுபட்டது. மேற்கத்திய நாடுகளில் பிரட், சீஸ், கொட்டைகள் போன்ற உணவுகள் இருந்தன.

முதுகுவலி, மூட்டுவலியை விரட்ட எளிய வழி

“முதுகுவலி, மூட்டுவலி என்று உடம்பில் தோன்றும் எந்த வலியையும் மருந்து, மாத்திரை, தைலம் ஏதுமின்றி, எளிய பயிற்சியின் மூலமே போக்கிவிடலாம்’’ என்கிறார், உடல் தோற்ற ஒழுங்கமைப்புச் சிகிச்சை (Posture Alignment Therapy) நிபுணரான டாக்டர் பரத் சங்கர். பா.ஜ.க. தலைவர் அத்வானி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா போன்றோருக்குச் சிகிச்சை அளித்தவர் இவர்.

புதிய சிகிச்சை முறையில் எவ்வாறு வலியைப் போக்கலாம் என்பது குறித்த பரத் சங்கரின் விளக்கக் கட்டுரை... ‘‘உடம்பில் ஓர் இடத்தில் ஏற்படும் வலி என்பது உடம்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து

வாய்ப்புண், சிறுநீர்த் தடைக்கு சிறந்த மருந்து மணத்தக்காளிக் கீரை

மணத்தக்காளி, தானாகவே தோட்டங்களில் வளரும் ஒருவகைச் செடி. இதன் இலை மற்றும் காய் மருத்துவக் குணம் வாய்ந்தது. மணத்தக்காளியின் பழம் கறுப்பாக மிளகு போல இருப்பதால் இதனை ‘மிளகு தக்காளி’ என்றும் கூறுவர்.

மணத்தக்காளியின் காய், மார்பில் சேரும் கோழை, இருமல் மற்றும் இளைப்பை நீக்கும். வாயில் ஏற்படும் புண் மற்றும் உடல் சூட்டைப் போக்கும். இந்தக் கீரையில் ரிபோபிளோவின், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புத் தாதுக்களும் உள்ளன. மணத்தக்காளி வாய்ப்புண்ணை தீர்க்கக் கூடியது.

சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள்

சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் உருவாகி நகரும் வரை எந்த அறிகுறியினையும் ஏற்படுத்தாது.

சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள்:

* விலா எலும்பின் கீழ், பின்புறம், பக்கவாட்டில் வலி ஏற்படும்.

* இந்த வலி அடி வயிறு தொடைமடிப்பு வரை பரவும்.

* சிறுநீர் வெளியேறும் பொழுது வலி ஏற்படும்.

* சிவப்பு, ப்ரஷன் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

* நாற்றமுடைய சிறுநீர் வெளியாகும்.

உடல் உஷ்ணத்தை தணிக்கும் கோவைக்காய்

உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பயிர் செய்யப்படுகின்ற பயனுள்ள மூலிகையாகவும் உணவு பொருளாகவும் கோவை விளங்குகின்றது. காய்ச்சலைப் போக்கும் தன்மை கோவைக்கு உண்டு. தாய்ப்பால் பற்றாத போது இளந் தாய்மார்களுக்கு பால் சுரக்கச் செய்வது, கோவையின் வேர் வாந்தியை நிறுத்தும் வல்லமை வாய்ந்தது.
கோவை இலைச்சாறு கடும் வலியைத் தணிக்கக் கூடியது. கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது. கோவை இலை தோல் நோய்களுக்கு மேற்பூச்சு மருந்தாகிறது. தோலில் உண்டாகும் அரிப்பு,

கால்சியம் சத்து நிறைந்த இலந்தை பழம்

இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்க்கலாம் இலந்தைப் பழத்தில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை. சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும்.

இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே. இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...