Wednesday, February 18, 2015

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது எது தெரியுமா!!!

குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கும் போது, வீடே மிகவும் சந்தோஷமாக, குஷியாக இருக்கும். அதே சமயம், வீட்டில் இருப்பவர்களுக்கு சற்று கஷ்டமும் கவலையும் இருக்கிறது. ஏனெனில் எப்போது குழந்தை தவழ ஆரம்பிக்கும் போதும், அதன் கை மற்றும் கால்கள் நீளும். எப்படியென்றால் அந்த நேரத்தில் அவர்களுக்குப் பிடித்த செயல்கள் அனைத்தையும் செய்வர். அவ்வாறு அவர்கள் செய்யும் செயல்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்... * புதிதான அம்மாவாக இருப்பவர்களின் கூந்தல் நீளமாக இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது குழந்தைகளை தூக்கும் போது, அவர்கள் கூந்தலைப் பார்த்தால் பிடித்துக் கொள்வர். அவர்களின் கைகளில் கூந்தல் கிடைத்தால், பின் அவற்றை அவர்களின் கைகளில் இருந்து எடுப்பது

அதிகமாக கோபப்படும் குழந்தைகளை கையாளுவது எப்படி?

எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாளுவது ஒன்னும் லேசுபட்ட காரியம் அல்ல. அவர்களை மாற்றுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்கு முக்கியமாக தேவைப்படுவது பொறுமையும் நீடித்து நிலைக்கும் திறனும். அதிகமாக கோபப்படும் குழந்தையை கையாள வேண்டும் என்றால், அவ்வகையான சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். அமைதியாக அழுதல் அல்லது மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுதல் என எப்படி வேண்டுமானாலும் அவர்கள் அவர்களின் கோபத்தை வெளிக்காட்டுவார்கள். இது போக உங்களை அடிக்கலாம், கூச்சலிடலாம், அழலாம் அல்லது கடிக்க கூட செய்யலாம். இவைகளில் எதையாவது

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்!!!

குழல் இனிது யாழ் இனிது என்பார் மக்கள் தம் மழலைச் சொல் கேளா தவர்' என்றார் வள்ளுவர். வள்ளுவனின் வார்த்தைகளுக்கேற்ப, உங்கள் குழந்தைகள் மழழை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது பேசுவார்கள் என்று நிச்சயம் காத்துக் கொண்டு தான் இருப்பீர்கள். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் வளரும் பருவத்திற்கு ஏற்ப வளர்ச்சிகளை அவர்கள் பெறுகின்றனரா என்று கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள். சில குழந்தைகள் விரைவாக பேசி விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தை, மழழை மொழியில் அழகாக பேசுவதை கேட்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவு கிடையாது. ஆனால்

உங்கள் குழந்தை பொய் சொல்வதை தெரிந்து கொள்ள 6 வழிகள்!!!

பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் தான் குழந்தைகளின் நடத்தை அமையும். பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும். அதற்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட காலப்போக்கில் அதனை அவர்களாகவே, தங்களுடன் இருக்கும் நண்பர்கள் அல்லது சூழ்நிலையால் அதனை கற்றுக் கொள்வார்கள். பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதன் மீது ஒரு கண் வைக்க வேண்டும். அப்படி பொய் சொல்கிறார்கள் என ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால், இந்த தீய பழக்கத்தை சுலபமாக மாற்றி விடும் வாய்ப்புள்ளது.

பெண்களை தாக்கும் மூட்டு வலி: தவிர்க்க வழிகள்

வயது முதிர்வு அடைந்தவர்களுக்கு பெரும் வேதனையாக இருப்பது மூட்டு வலி. இன்றைய இளம் தலைமுறையினரும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களை இந்த மூட்டு அதிகம் தாக்குகிறது. மாதவிடாய் நின்ற பிறகு உடலில் உள்ள கால்சியம் குறைவதால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும். நாளடைவில் இதுவே பெரிய நோயாக மாறும். இந்த மூட்டு வலியை நீக்க நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது.

நகம் கடித்தால் புற்று நோய் வரும்

பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும். நகம் கடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது.

* சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும் வாய்ப்புகள் உண்டு. இப்படி விழுங்குவதால் வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.

* சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில், செரிமானம் ஆகாத உணவுத் துகள்கள் குடல்வால் பகுதியில் சேகரமாகும். இதனால் அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல்வால் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

கொழுப்பை குறைக்கும் வெந்நீர்

தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிதமான நீரை விட வெந்நீரை தினமும் பருகும் போது அது உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது.

உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டை பிரச்சனைகள் தீரும்.

கணைய புற்றுநோய் அணுக்களை அழிக்கும் பாகற்காய்

கசப்புச் சுவையுள்ள பாகற்காய் பல நல்ல பலன்களைக் கொண்டிருக்கிறது. எனவே முகத்தைச் சுளிக்காமல் பாகற்காயை சமைத்துச் சாப்பிட்டாலோ, ஜூஸாக தயாரித்துக் குடித்தாலோ கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்...

மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்துவந்தால் அல்லது பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இதில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டிஹைபர் கிளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு ரத்தம் மூலம் சர்க்கரையைக் கொண்டு செல்லும் முக்கிய வேலையைச் செய்கின்றன.

நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

• பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

• செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

இதய நோய்க்கு மருந்தாகும் புடலங்காய்

புடலங்காய் நாம் சாதாரணமாக கறியாக சமைத்து உண்ண பயன்படுத்துவோம். மிக்க சுவையான அந்த காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்தோம் இல்லை. கறிக்குப் பயன்படுத்தும் புடலங்காயில் பன்றிப்புடல், கொம்புப்புடல், பேய்ப்புடல் என வேறு வகைப் புடலங்காய்களும் உண்டு.

புடலங்காய் மேற்புறத்தில் மென்மையான தோலை உடையதாகும். 150 செ.மீ அளவுக்கு இது நீளமாக வளரக்கூடியது ஆகும். உள்ளே நீரோடும் சற்று பிசுபிசுப்பும் கூடிய சதைப்பற்று உடையதாக இருக்கும். இது சற்று கசப்பு சுவையுடைதாக இருப்பினும். சமைக்கும் போது இதன் கசப்புத் தன்மை போய் விடுகின்றது.

நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகள்

பல்வேறு காரணிகளால் காற்று மாசுபாட்டில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு உயர்வு, மிகக் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

கடும் சுவாசப்பாதை கோளாறு, வயது முதிர்ந்தோரின் இறப்புகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் சில உணவுகளை பார்க்கலாம். இந்த உணவுகள் நுரையீரல் நலனை ஊக்குவிப்பதோடு, காற்று மாசுபாடு மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்ள, இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

காலையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள்

காலை உணவை எடுத்துக்கொண்டால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக்கொள்வதுடன், கூடவே பழங்களையும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

வாழைப்பழம் :

குடலியக்க பிரச்சனையோ அல்லது மலச்சிக்கல் பிரச்சனையோ இருப்பவர்கள், காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நச்சுக்களானது சீரான முறையில் தள்ளப்பட்டு, செரிமான மண்டலமானது முறையாக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனையானது நீங்கும். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடலின் எனர்ஜியானது நாள் முழுவதும் இருக்கும்.

உணவு முறையின் மூலமாக கல்லீரலை பாதுகாக்க முடியும்

* பாதாம்: இதில் உள்ள புரதம், நார்சத்து, ரிபோப்ளேவின், மக்னீயம், இரும்பு இவை மிகவும் நல்லது. மற்ற கொட்டை வகைகளும் சிறந்ததே. தேங்காய் தவிர்ப்பது நல்லது. கொட்டை வகைகளை 10&15 உப்பில்லாமல் சாப்பிடுவது நல்லது.

* ஓட்ஸ்: அதிக கரையும் நார்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் நிறைந்த வைட்டமின்களும், தாது உப்புக்களும் கொண்ட இந்த உணவு கல்லீரலுக்கு நல்ல பாதுகாப்பை தரும்.

* சோயா: நல்ல புரதம் உடையது. கொலஸ்டிரால் இல்லாதது. நார்சத்து உடையது. மிக நல்ல உணவு.

* கீரின் டீ அல்லது பால் இல்லாத டீ 1 முதல் 2 கப் நாள் ஒன்றுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...