Friday, January 30, 2015

சிகரெ‌ட் பிடிப்பவர்களுக்கு தா‌ம்ப‌த்‌தியத்தில் ஆர்வம் குறையும்

தொட‌ர்‌ந்து புகை‌ப் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு தா‌ம்ப‌த்‌திய உறவு கொ‌ள்ளு‌ம் போது செய‌ல்படா‌த் த‌ன்மை உ‌ள்‌ளி‌ட்ட பா‌லிய‌ல் குறைபாடுக‌ள் அ‌திக அள‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று தெ‌ரி‌ய வந்துள்ளது.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் இது‌தொட‌ர்பாக கட‌ந்த இர‌ண்டு ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு நட‌த்த‌ப்ப‌ட்ட ஆ‌ய்‌வி‌ல், நா‌ள் ஒ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்களு‌க்கு தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ‌சி‌க்க‌ல் உருவாகு‌ம் எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர். இவ‌ர்களு‌க்கு தாம்ப‌த்‌திய உற‌வி‌ன் போது ஏ‌ற்படு‌‌ம் ‌விறை‌ப்பு‌த்த‌ன்மை‌யி‌ல் ‌சி‌க்க‌ல் எழு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்

கர்ப்பிணிகளுக்கு ஓய்வு அவசியம். அவர்கள் உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது என மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஒருக்களித்துப் படுப்பதே நல்ல படுக்கை முறை. மல்லாந்து படுக்கும்போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம்.

தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் பாதுகாப்பாக இருந்தால் தானே வயிற்றில் உள்ள சிசுவும் பாதுகாப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுகள் தாய் மற்றும் கருவில் இருக்கு சிசு என இருவருக்குமே நல்லதல்ல. உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் தவிர்க்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

• காப்ஃபைன் அளவு அதிகமாக உள்ள பானங்களான சோடா, கோலா போன்றவைகளை தவிர்க்கவும். கர்ப்ப காலத்தின் போது அளவுக்கு அதிகமாக காப்ஃபைனை உட்கொள்வது, குறிப்பாக முதல் மூன்று

ஆரோக்கியத்தை பாதிக்கும் ஊறுகாய்

ஊறுகாயில் பல வெரைட்டிகள் உள்ளன. மேலும் இந்த உணவுப் பொருள் தான் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். இதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்தும் பொருட்கள் தான்.

என்ன தான் ஊறுகாயை தினமும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலும், அது கொஞ்சம் கொஞ்சமாக உயிரை கொல்லும். இப்போது ஊறுகாயை அன்றாடம் எடுத்து வந்தால், என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம்.... ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் - அல்சர் - புற்றுநோயை குணப்படுத்தும் முள்ளங்கி

முள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறிந்தோமில்லை. முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என வேறு சில வகை முள்ளங்கிகளும் உண்டு.

ஆயினும் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டவை. வெண்ணிற முள்ளங்கி யானையின் தந்தத்தைப் போன்றதாய் நீண்டும் பெரியதாய் காணப்படும். சிறுமுள்ளங்கி கார்ப்புச் சுவையும், உஷ்ணத் தன்மையும் கொண்டு இருக்கும். இது உணவுக்கு சுவையூட்டும். குரலை

குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்

• குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த திராட்சைப் பழத்தை பசும்பால் அல்லது தண்ணீரில் ஊறவையுங்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு பழத்தைப் பிழிந்து அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தால், மலம் தாராளமாக போக ஆரம்பிக்கும்.

• குழந்தைகள் சிலநேரம் உணவு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சதக்குப்பையை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால் பிரச்சனை சரியாகும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்

இவ்வுலக உயிர்கள் உய்வதற்கென்று இயற்கை அள்ளித்தந்த ஏராளமான மூலிகைகளுள் வெந்தயமும் ஒன்று. இது கீரை இனத்தைச் சார்ந்தது. இதை மற்ற கீரைகள் போல் சமைத்துண்ண சுவையான உணவாகவும் உண்டோர்க்கு சுகம் தரும் நல் மருந்தாகவும் விளங்குகிறது.

வெந்தய விதைகளும் இதைப் போலவே உணவாகவும் மருந்தாகவும் நமக்குப் பயன் தருகிறது. இது சிறிது கசப்பு, கார்ப்பு, குளிர்ச்சி ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ளது. வெந்தயக் கீரை குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது, மலத்தை இளக்கும் தன்மை உடையது, சிறுநீரைப் பெருக்கும் தன்மை வாய்ந்தது, உள்ளார்ந்த வீக்கத்தையும், உஷ்ணத்தையும் போக்க கூடியது, வற்றச்செய்யும் தன்மையுடையது,

இருமலை கட்டுப்படுத்தும் மாதுளம் பழம்

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.

ஊட்டச்சத்து நிறைந்த சிவப்பு கீரை

கீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் பச்சை நிறம் கொண்ட கீரைகளை விட கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட சிவப்பு கீரையில் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

குறிப்பாக சிவப்பு கீரையில் அதிக இரும்பு சத்து காணப்படுவதால் ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் சேர்க்கிறது. கூடுதலாக சிவப்பு கீரையில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் சி பொட்டாசியம், பாஸ்பரஸ் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிராம் கீரையிலும் 45 கிலோ கலோரி, புரதம் 3.5 கிராம், 0.5 கிராம் கொழுப்பு, 6.5 கிராம் கார்போஹைட்ரேட், 267

சர்க்கரை மற்றும் கொழுப்புசத்தை குறைக்கவல்ல பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் எனினும் அதிலே பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது.

அதுபோலவே மஞ்சள் கரி சாலையும் பொன் சத்தை பெற்றிருக்கிறது. பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி. இன்றைக்கு தங்கபஸ்பம் என்பது மன்னர்களுக்குக் கூட எட்டாத ஒரு மருந்தாகிப்போனது. ஆனாலும் இறைவன் அதை ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...