Saturday, August 9, 2014

தலைவலியை தவிர்க்கும் வழிமுறைகள்

ஏதாவது ஒரு சிக்கல் வந்தால் அதை பெரிய தலைவலி என்பது பொதுவான வழக்கம். உடலில் ஏற்படும் தலைவலி என்பது தலை மற்றும் கழுத்துடன் சேர்ந்த வலியாகும். தலைக்கு உள்ளே இருக்கும் மூளையைப் பற்றியும், வெளியே இருக்கும் முடியைப் பற்றியும் மருத்துவ ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

`எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்'. இதில் ஏற்படும் தலைவலி என்பது தலை, சதை, ரத்தக் குழாய்கள், கண், காது இப்படி பல பிரிவுகளை உட்கொண்டது. தலைவலி என்பது ஒரு ஆலமரம் போல். இதன் கீழ் சுமார் 200-க்கும் மேற்பட்ட காரணங்களை குறிப்பிட முடியும். ஆனால், பொதுவில் இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

ஆண்களை அதிகம் தாக்கும் பெருங்குடல் புற்று நோய்

மூலம், ஆசனவாய் வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அதனால்தான் இந்த நோய்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் குறைவு.

ஆனால் மலக்குடல் புற்றுநோய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆண்களை அதிகம் தாக்குகிறது. இரும்பு சத்து பற்றாக்குறை கொண்ட ரத்தசோகை இருந்தால் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவைகளில் எதிலும் புற்றுநோய் இருக்கலாம். பெற்றோருக்கு குடல் புற்று நோய் இருந்தால், பிள்ளைகளையும் அது தாக்க அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.

துளசி புத்துணர்ச்சி அளிக்கும்

எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசியின் மருத்துவ மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் வராது.
ஜீரண சக்தியையும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் துளசி போக்கும்.

நமது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு வியாதி வராது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க, குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் நாற்றம் நீங்கும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...