Wednesday, November 27, 2013

கத்தரிக்காய் மருத்துவ குணங்க‌ள்

கத்தரிக்காயில் அதிளவு சத்துக்கள் உள்ளன.பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்..

மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.
ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும்

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உணவு முறைகள்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. அத்தகைய உணவுகள் என்னென்னவென்று பார்க்கலாம்.

• பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.

Sunday, November 24, 2013

நெஞ்சு எரிச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்!

`ஜீரணம்' அதாவது `செரித்தல்' முதலில் வாயில் தான் ஆரம்பிக்கிறது. சாப்பாட்டின் மணம், நம் மூக்கில் பட்டவுடனேயே, வாயைச் சுற்றியுள்ள உமிழ்நீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு, உமிழ் நீரை சுரக்கச் செய்கிறது. இதைத்தான் சாப்பாட்டைப் பார்த்தவுடனேயே, வாயில் எச்சில் ஊறுகிறது என்று சொல்வதுண்டு.

ஒருமுறை என் நடிக நண்பர் ஒருவர் என்னிடம் , ``ரோட்டில் காரில் போகும்போது, ஹோட்டலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் போர்டிலுள்ள, சாப்பாட்டு அயிட்டங்களின் பெயர்களைப் படித்தாலே, எனக்கு நாக்கில், எச்சில் இஷ்டத்துக்கு ஊற ஆரம்பித்து விடுகிறது. அதற்கு மேல் என்னால் வண்டியை ஓட்ட முடியலை'' என்றார். அவர் சொன்னது உண்மை தான்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மூலிகைகள்

உலகளவில் சர்க்கரை நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஐந்தாவது இந்தியக் குடிமகனும் ஒரு சர்க்கரை நோயாளி என்னும் அளவிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியா உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. `

`நீரழிவு'', ``மதுமோகம்'' என்ற பெயர்களால் இந்நோய் நெடுங்காலமாய் நம் மருத்துவத்தில் அறியப்பட்டுள்ளது. ஒரு நோயாளியின் சிறுநீரைத் தரையில் விட்டு அவ்விடத்தில் எறும்புகள் ஈர்க்கப்படுவதனை வைத்து இந்நோயை நம் முன்னோர்கள் கணித்தனர்.

2012-ம் ஆண்டு உலக சர்க்கரை நோயாளிகள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 6.3 கோடி மக்கள் சர்க்கரை

ஆயுர்வேதத்தில் தைராய்டு நோய்க்கு நிரந்தர தீர்வு

தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. தைராய்டு நோய் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

முறையாக, தொடர்ச்சியாக ஆங்கில மருந்தோ, சித்த ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்தோ முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். மந்தாரை- தைராய்டு நோய்க்கு அற்புத தீர்வு.

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

கல்யாண முருங்கை (முள் முருங்கை):-

அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். சர்க்கரை நோய், சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.

வாழைத்தண்டு:- சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.

சுரை‌க்கா‌யி‌ன் மருத்துவ குணங்க‌ள்

சுரை‌க்கா‌ய் ‌நீ‌ர்‌ச்ச‌த்து ‌மிகு‌ந்தது. இ‌தி‌ல் வை‌ட்ட‌மி‌ன் ‌பி2, இரு‌ம்பு‌ச் ச‌த்து, சு‌ண்ணா‌ம்பு‌ச் ச‌த்து, புரத‌ம் ஆ‌கியவை உ‌ள்ளன. சுரை‌க்காயை சமை‌த்து உண்டு வந்தால் உட‌ல் ‌வீ‌க்‌க‌ம் குறையு‌ம். ‌சிறு‌நீ‌ர் ‌அ‌திகமாக இற‌ங்கு‌ம்.

இதை க‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌ண்க‌ள் பாத ‌வீ‌க்க‌ம் குறைய சமை‌த்து உ‌ண்ணலா‌ம். சுரை‌க்கா‌ய், துள‌சி, ஆடாதோடை ஆ‌கியவ‌ற்றை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி, அவ‌ற்றுட‌ன் சு‌க்கு, ‌தி‌ப்‌பி‌லி, ப‌ற்படாக‌ம், கோரை‌க் ‌கிழ‌ங்கு சே‌ர்‌த்து கஷாய‌மி‌ட்டு குடி‌த்து வர கு‌ளி‌ர் கா‌ய்‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

சுரை‌க்கொடியை பூ‌ண்டுட‌ன் சே‌ர்‌த்து சமை‌த்து உ‌ண்டு வ‌ந்தாலோ அ‌ல்லது கொடியை ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி கஷாயமா‌க்‌கி‌க் குடி‌த்து வ‌ந்தாலோ, உட‌லி‌ல் த‌ங்‌கிய ‌நீர் வெ‌ளியா‌‌கி, உட‌ல் ‌‌வீ‌க்க‌த்தை குறை‌க்கு‌ம். சுரை‌க்கொடி இலையை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌‌ச்‌சி ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து குடி‌த்து வர காமாலை குணமாகு‌ம்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...