Friday, May 17, 2013

வெந்தயக் கீரை மாரடைப்பை குணப்படுத்தும்

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த

நாவல் பழம் மருத்துவ குணம்

நாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும்.

நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.

வெயிலுக்கு இதமான மோர்

கோடைகாலம் வந்தாலே விதம் விதமாக குளிர்பான விளம்பரங்கள் கலக்கி எடுக்கும். ஆனால் உண்மையான இயற்கை குளிர்பானத்தை நாம் மறந்து விடுகிறோம். ஏழைகளின் சக்தி என்று கருதப்படுவது, நீராகாரம். முதல் நாள் வடித்த சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்து அதை மறுநாள் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது தான் நீராகாரம்.

அதில் உள்ள சத்துக்களை எந்த நவீன மருந்தும் தர முடியாது. அதே போன்ற மற்றொரு சத்தான பானம், மோர்,பாலை உறை ஊற்றி கிடப்பது தயிர். இந்த தயிரை மத்து கொண்டு கடைந்து வெண்ணெய் சத்தை பிரித்து எடுத்துவிடவேண்டும்.

கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைத்தபின் மோர் கிடைக்கும் இதனுடன், கறிவேப்பிலை,மல்லிதழை,இஞ்சி,பச்சை மிளகாய், போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

தினமும் முட்டை சாப்பிட்டால்...

நமது உடலுக்கு கொழுப்பு சத்து அவசியம். உடல் உற்பத்தி செய்யும் கொழுப்பையும் சேர்த்து, ஒரு நாள் நம் உடலுக்கு 130 மி.கிராம் கொழுப்பு தேவை. ஆனால் ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டும் கிட்டத்தட்ட 210 மி.கிராம் கொழுப்பு கிடைக்கிறது. அதனால் முட்டை நிறைய சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்துவிடும்.

ஒரு வாரத்தில் எத்தனை முட்டை சாப்பிடலாம்?

உடலில் அதிக அளவு கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், வாரத்திற்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிடக்கூடாது. ஆம்லெட் செய்தோ, குழம்பில் பயன்படுத்தியோ, பொரித்தோ அதனை சாப்பிடலாம். முட்டையின் மஞ்சள் கருவில்தான் கொலஸ்ட்ரால் குவிந்திருக்கிறது.

பாலில் உள்ள சத்துக்கள்.......

உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் புரோட்டீன் மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்று.

மேலும் சிலருக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்படும். அத்தகைய வலிகள் வருவதற்கு காரணம் கால்சியம் குறைபாடு.. ஆகவே எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதற்கு, கால்சியம் அதிகம் நிறைந்த பாலை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து,

கிவி பழம் இதய இயக்கத்திற்கு வலுசேர்க்கும்


கிவிப் பழத்திற்கு சீனத்து கள்ளிப்பழம் என்ற பெயரும் உண்டு. உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள், ரசாயன மூலக்கூறுகள் நிறைந்தது கிவி. அதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோமா...

* கிவிப் பழத்தின் தாயகம் மேற்கு சீனப் பிரதேசமாகும். இது சீனாவின் தேசியக் கனி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அறிவியல் பெயர் அக்டினிடியா சைனிசிஸ். வெப்ப மண்டல கனி வகைகளில் இதுவும் ஒன்று.

* கிவிப் பழத்தின் சிறப்பம்சமே அதன் நார்ச்சத்துதான். எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள் இதில் ஏராளம் உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.8 கிராம் நார்ச்சத்து அடங்கி உள்ளது.

Monday, May 13, 2013

சில உடனடி எளிய இயற்கை உணவு தயாரிப்பு

''சமைக்கும்போது சூடுபடுத்துவதாலும், சில சுவையூட்டிகளைப் பயன்படுத்து வதாலும் உணவின் உண்மையான சத்துக்கள் நசிந்து போய்விடுகின்றன. . இதோ சில உடனடி எளிய இயற்கை உணவு தயாரிப்பு

பீட்ரூட் கீர்:

சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்கு வெல்லம் மற்றும் ஏலம், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கும் கீருக்குப் பதிலாக
இதைத் தரலாம்.

வாழைப்பூ சட்னி:

நரம்பு நீக்கி சுத்தம் செய்த வாழைப்பூவில் கைப்பிடி அளவை சிறுசிறு துண்டுகளாக்கி, சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நீக்கிய

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...