Saturday, November 10, 2012

முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?

முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.

முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும். மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

Tuesday, November 6, 2012

இறைவன் மனிதனை எதற்காக படைத்தான்?

எதற்காக மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டோம். இந்த கேள்வி அனைத்து மனிதனுக்கும் ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பதிலை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் பதில் திருப்திகரமானதா என்றால் பெரும்பாலும் கேள்விக்குறியே.
 

முஸ்லிமாகிய நாம் அல்லாஹ்வை வணங்குவதற்காக என்று சொல்வோம். ஆனால் எதற்காக அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று கேட்டால் கேள்வியே பதிலாக வரும்.

இதை ஒரு மேற்கத்திய நபரிடம் கேட்டால் அவர் இவை அனைத்தும் பரிணாம வளர்ச்சியே (Evolution) என்பார்.மாடுகள், நாய்கள் எதற்காக படைக்கப்பட்டன, எந்த ஒரு நோக்கமுமில்லை. அது போலவே மனிதன் படைக்கப்பட்டதும் எந்த ஒரு நோக்கத்திற்காகவுமில்லை என்று சொல்வார்.இறைவன் ஏன் மனிதனை படைக்க வேண்டும் என்ற கேள்வி வருவதற்கு முன் இறைவன் எத்ற்காக படைக்கிறான்? என்ற கேள்வியும் வரவே செய்கிறது.

Monday, November 5, 2012

உங்களுக்கு நேசிக்கத் தெரியுமா?



அன்பு செலுத்துவது ஒரு கலை. இதில் தேர்ச்சி பெற வேண்டுமானால், அறிவும் பயிற்சியும் தேவை. பலவந்தமாகப் பிடுங்குவது அல்ல; பங்கு வைக்கும்போதுதான் அன்பு வளர்கிறது. வெளிபடுத்தப்படாத அன்பு பயனளிக்காது. ஒவ்வொரு புலன்களின் வழியாகவும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அன்பை வெளிப்படுத்துவது அவசியம்.
"உங்களுக்கு என்னிடம் அன்பு இருக்கிறதா?" ஒவ்வொரு தம்பதியும் பரஸ்பரம் கேட்டுக்கொள்ளும் சாதாரணமான கேள்வி இது.
பதிலை பெரும்பாலும் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள்.
"பிறகு எதற்காக நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னையும் பிள்ளைகளையும் காப்பாற்றுகிறேன்?"
"ஒரு விஷயம் உண்மை. நான் உங்களை நேசிப்பது மாதிரி, நீங்கள் என்னை நேசிப்பது இல்லை!
"உங்களுக்கு என் மீது அன்பு இருக்கிறதா?" என்று கேட்பவர்கள், சுயமாகத் தங்களிடம் தாங்களே கேட்டுப்பாருங்கள்.

Sunday, November 4, 2012

சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்



வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.

மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத்

நபி வழி மருத்துவம்

வெந்தயம் (சுத்தம் செய்யப்பட்டது) -1 கிலோ.
சுத்தமான நெய் - 100 கிராம்.
மண்பானை சோறு, சுத்தமான நீர்.

செய்முறை:- மண் பானையில் வேகவைத்த சோறு இரு கைபிடியளவு எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அந்த சோறு மூழ்கும் அளவிற்கு சுத்தமான தண்ணீர் விட வேண்டும். 12 மணி நேரத்திற்கு பிறகு அந்த சோற்றின் நீரை மட்டும் தனியாக எடுத்து, அந்த நீரில் 1 கிலோ சுத்தமாக்கப்பட்ட வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். நீர் வெந்தயத்தை விட கூடுதலாக இருக்க வேண்டும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...