Sunday, November 4, 2012

நபி வழி மருத்துவம்

வெந்தயம் (சுத்தம் செய்யப்பட்டது) -1 கிலோ.
சுத்தமான நெய் - 100 கிராம்.
மண்பானை சோறு, சுத்தமான நீர்.

செய்முறை:- மண் பானையில் வேகவைத்த சோறு இரு கைபிடியளவு எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அந்த சோறு மூழ்கும் அளவிற்கு சுத்தமான தண்ணீர் விட வேண்டும். 12 மணி நேரத்திற்கு பிறகு அந்த சோற்றின் நீரை மட்டும் தனியாக எடுத்து, அந்த நீரில் 1 கிலோ சுத்தமாக்கப்பட்ட வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். நீர் வெந்தயத்தை விட கூடுதலாக இருக்க வேண்டும். ஒரு நாள் (24 மணி நேரம்) முழுவதும் ஊறவேண்டும்.முழு நீரை வெந்தயம் உறிஞ்சிவிடும். பிறகு அந்த வெந்தயத்தை 3 நாட்கள் தொடர்ந்து வெயிலில் காயப்போடவேண்டும்.

வெய்யிலில் காய்ந்த வெந்தயத்தை 4 ஆம் நாள் மண் சட்டியில் 100 கிராம் சுத்தமான நெய்யில் போட்டு வறுக்க வேண்டும்.

வெந்தயம் பொன் போன்ற நிறம் வந்த பிறகு, அதை எடுத்து சூடு ஆற வைக்கவேண்டும். சூடு ஆரிய பின், பாட்டிலில் போட்டு வைத்து கொள்ள வேண்டும

பயன் படுத்தும் முறை:- தினமும் இரவு தூங்க செல்லும் முன், ஒரு ஸ்பூன் அளவு உட்கொள்ள வேண்டும். வாயில் போட்டு மெல்லக்கூடது. அப்படியே விழுங்கி விட வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட வேண்டும்.

சிறப்பு:- சிறுநீர், மலம் கழிக்க சிரமம் ஏற்படாது. கண்ணுக்கு குளிர்ச்சி..

மலம், சிறுநீர் சிரமம் இன்றி போனாலே வியாதிகள் உருவாக வாய்ப்பு இல்லை..

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...